இம் மாதத்தில் இதுவரை மட்டும் 120,000 சுற்றுலாப் பயணிகள்
ஒக்டோபர் மாதத்தின் கடந்த 03 வாரங்களில் மட்டும் சுமார் 120,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
ஒக்டோபர் 23 ஆம் திகதி நிலவரப்படி 119,670 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக அந்த அதிகாரசபை கூறுகிறது.
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை
அதன்படி, இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதி வரையில் 1,845,164 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர்.

