வடமராட்சி – கர வெட்டி பகுதியில் வீட்டை உடைத்து உள் நுழைந்த கொள்ளையர் கள் சுமார் 21 பவுண் தங்க நகைகளை கொள் ளையிட்டு சென்ற சம்ப வம் புதன்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

வீடு உடைத்து யடி – கொடிகாமம் வீதியில் உள்ள கரவெட்டி மத்தி – கோவிற்சந்தை பகுதியில் உள்ள வீடொன்றிலேயே இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டிலிருந்த மூவர் உறங் கிக் கொண்டிருந்த நிலை யில், வீட்டு கதவுகளை உடைத்து உள்நுழைந்த கொள்ளையர்கள் வீட்டிலி ருந்த சுமார் 21 பவுண் தங்க நகைகளை கொள்ளையிட் டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலை யத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை
முன்னெடுத்துள்ளனர். வடமராட்சி பிரதேசத்தில் நீண்டகாலத்தின் பின் னர் இவ்வாறான பாரிய கொள்ளை சம்பவம் இடம் பெற்று ள்ளமை குறிப்பிடத் தக்கது.

 

Share.
Leave A Reply

Exit mobile version