இலங்கைப் போக்குவரத்துச் சபையில் (SLTB) 19 பெண் நடத்துனர்கள் நிரந்தரப் பணியில் நியமிக்கப்பட்டனர். இது இலங்கையின் பொதுப் போக்குவரத்துத் துறைக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லாகும்.
மாகும்புர மல்டிமாடல் போக்குவரத்து மையத்தில் வௌ்ளிக்கிழமை (06) அன்று இந்த நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஊடகத்துறை பிரதி அமைச்சர் கௌசல்யா அரியரத்ன, கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமன்மாலி குணசிங்க மற்றும் இலங்கைப் போக்குவரத்துச் சபைத் தலைவர் சஜீவ கனகரட்ண ஆகியோர் கலந்து கொண்டனர்.

நியமிக்கப்பட்டவர்கள் இலங்கைப் போக்குவரத்துச் சபையின் முதல் அதிகாரப்பூர்வ பெண் நடத்துனர்களாக வரலாற்றில் இணைந்துள்ளனர் என்று குறிப்பிட்டார்.