சர்­வ­தேச எரி­சக்தி விநி­யோ­கத்தின் மையப்­புள்­ளி­யாகத் திகழும் ‘ஹோர்முஸ் நீரிணை’ (Strait of Hormuz) இந்த மோதலால் முடக்­கப்­பட்டால், அது உலக நாடு­களை மீள­மு­டி­யாத ஒரு பொரு­ளா­தார நெருக்­க­டிக்குள் தள்­ளி­விடும். இலங்­கை­யையும் இது கடு­மை­யாக பாதிக்கும்.

மத்­திய கிழக்கு பிராந்­தி­யத்தில் போர் மேகங்கள் சூழ்ந்­துள்ள இன்­றைய கால­கட்­டத்தில், அமெ­ரிக்­கா­வுக்கும் ஈரா­னுக்கும் இடையே ஏற்­ப­டக்­கூ­டிய நேரடி மோதல் என்­பது வெறும் இரு நாடு­க­ளுக்கு இடை­யி­லான விவ­கா­ர­மாக மட்டும் பார்க்­கப்­பட முடி­யாது.

இது உலகப் பொரு­ளா­தா­ரத்தின் நரம்பு மண்­ட­லத்தைத் தாக்­கக்­கூ­டிய ஒரு பாரிய அச்­சு­றுத்­த­லாக அமையும் என்­பதே யதார்த்­த­மாகும்.

குறிப்­பாக, சர்­வ­தேச எரி­சக்தி விநி­யோ­கத்­தின் மையப்­புள்­ளி­யாகத் திகழும் ‘ஹோர்முஸ் நீரிணை’ (Strait of Hormuz) இந்த மோதலால் முடக்­கப்­பட்டால், அது உலக நாடு­களை மீள­மு­டி­யாத ஒரு பொரு­ளா­தார நெருக்­க­டிக்குள் தள்­ளி­விடும்.

2022ஆம் ஆண்டின் பொரு­ளா­தாரப் பின்­ன­டைவில் இருந்து இப்­போ­துதான் மெல்ல மீண்டு வரும் இலங்­கைக்கு, இத்­த­கைய சூழல் நினைத்­துப்­பார்க்க முடி­யாத சவால்­களைக் கொண்­டு­வரும்.

யுத்த மேகங்கள் மற்றும் இரா­ணுவ நகர்­வுகள், மத்­திய கிழக்கில் போர் அபாயம் அதி­க­ரிப்­ப­தற்­கான அறி­கு­றிகள் அண்மைக் கால­மாகத் தென்­ப­டு­கின்­றன.

குறிப்­பாக, தென் சீனக் கடலில் நிலை­நி­றுத்­தப்­பட்­டி­ருந்த அமெ­ரிக்­காவின் மிகப்­பெ­ரிய விமானம் தாங்கிக் கப்­ப­லான ‘ஆபி­ரகாம் லிங்கன்‘ ஈரா­னுக்கு அரு­கில் கொண்டு வரப்­பட்­டி­ருப்­ப­தாக சர்­வ­தேச ஊட­கங்கள் தெரி­விக்­கின்­றன.

இது சர்­வ­தேச அர­சி­யலில் பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. 333 மீற்றர் நீளம் கொண்ட இந்த பிரம்­மாண்டக் கப்பல், நூற்­றுக்­க­ணக்­கான போர் விமா­னங்­களை இயக்கும் வல்­லமை கொண்­டது.

ஈரானை சுற்­றி­யுள்ள அண்டை நாடு­களில் ஏற்­க­னவே அமைக்­கப்­பட்­டுள்ள அமெ­ரிக்­காவின் இரா­ணுவத் தளங்­க­ளுடன், இந்தக் கப்­பலின் வரு­கையும் சேரும்­போது, அப்­பி­ராந்­தி­யத்தில் ஏதோ ஒரு பாரிய மோதல் நிக­ழப்­போ­கி­றதா என்ற அச்சம் உலக நாடு­க­ளி­டையே எழுந்­துள்­ளது.

இது தொடர்பில் கருத்து வெளி­யிட்ட பொரு­ளா­தார நிபுணர் கொழும்பு பல்­க­லைக்­க­ழ­கத்தின் சிரேஷ்ட விரி­வு­ரை­யாளர் கலா­நிதி கணே­ச­மூர்த்தி, உலகின் 20 வீத­மான எண்ணெய்ப் போக்­கு­வ­ரத்து இந்த ஹோர்முஸ் நீரிணை வழி­யா­கவே இடம்­பெ­று­கி­றது.

ஏதோ­வொரு நட­வ­டிக்கை கார­ண­மாக இந்த நீரிணை முடக்­கப்­பட்டால் நிச்­சயம் ஆசிய பொரு­ளா­தாரம் பாதிக்­கப்­படும். இலங்­கையின் பொரு­ளா­தாரம் மிகப் பெரிய சவால்­களை சந்­திக்கும் என்று குறிப்­பி­டு­கிறார்.

ஹோர்முஸ் நீரி­ணையின் கேந்­திர முக்­கி­யத்­துவம்

உலகப் பொரு­ளா­தா­ரத்தின் ‘கழுத்து எலும்பு’ என்று அழைக்­கப்­படும் ஹோர்முஸ் நீரிணை, பார­சீக வளை­கு­டா­வுக்கும் ஓமான் வளை­கு­டா­வுக்கும் இடைப்­பட்ட மிகக் குறு­கிய கடல் வழி­யாகும்.

இதன் அகலம் சில இடங்­களில் வெறும் 33 கிலோ­மீற்­றர்கள் மட்­டு­மே­யாகும். புள்­ளி­வி­பர ரீதி­யாகப் பார்த்தால், உலகின் மொத்த எண்ணெய் நுகர்வில் சுமார் 20 சத­வீ­தத்­துக்கும் அதி­க­மான கச்சா எண்ணெய் இந்த ஒரு வழி­யா­கவே கொண்டு செல்­லப்­படு­கி­றது.

நாளொன்­றுக்கு சரா­ச­ரி­யாக 21 மில்­லியன் பீப்­பாய்கள் எண்ணெய் இதன் ஊடாகப் பய­ணிக்­கி­றது. கட்­டா­ரி­லி­ருந்து ஏற்­று­மதி செய்­யப்­படும் திரவ இயற்கை எரி­வா­யுவும், சவுதி அரே­பியா, ஈராக், குவைத் மற்றும் ஐக்­கிய அரபு அமீ­ரகம் போன்ற பெரும் எண்ணெய் உற்­பத்­தி­யா­ளர்­களின் பிர­தான ஏற்­று­மதிப் பாதையும் இது­வே­யாகும்.

ஈரான் மீது அமெ­ரிக்கா தாக்­குதல் நடத்­தினால், அதற்குப் பதி­ல­டி­யாக ஈரான் மேற்­கொள்­ளக்­கூ­டிய முதல் நட­வ­டிக்கை ஹோர்முஸ் நீரி­ணையை மூடு­வ­தாகும். அல்­லது அங்­குள்ள போக்­கு­வ­ரத்தைத் தடுக்கும்.

அதே­நேரம் அமெ­ரிக்­காவும் ஈரான் மீது தாக்­குதல் நடத்­தினால் இந்த நீரி­ணையை முடக்கும் சாத்­தியம் உள்­ளது. இது நடந்தால் உலக சந்­தையில் கச்சா எண்ணெய் விலை உட­ன­டி­யாக 100 டொலர்­களைத் தாண்டி அதி­க­ரிக்கும்.

மாற்று வழிகள் மூலம் இவ்­வ­ளவு பெரிய அளவு கச்சா எண்­ணெயைக் கொண்டு செல்­வது சாத்­தி­ய­மற்­றது. அதிக செலவு மிக்­க­தா­கவும் அமையும். இந்­நி­லையில் எரி­பொருள் விலை அதி­க­ரிப்பு என்­பது அனைத்து உற்­பத்தி மற்றும் போக்­கு­வ­ரத்துத் துறை­க­ளையும் பாதிக்கும் என்­பதால், இது உலக நாடு­களின் அத்­தி­யா­வ­சியப் பொருட்­களின் விலையை வானை தொடச் செய்யும் என்­பதை மறுக்க முடி­யாது.

இலங்­கையின் பொரு­ளா­தா­ரத்தின் மீதான தாக்கம்

இலங்­கையைப் பொறுத்­த­வரை, மத்­திய கிழக்கு போர் என்­பது ஒரு நேரடித் தாக்­கு­தலை விடவும் மோச­மான விளை­வு­களை பொரு­ளா­தா­ரத்தில் ஏற்­ப­டுத்தும்.

இலங்கை தனது எரி­பொருள் தேவையை முழு­மை­யாக இறக்­கு­ம­தி­யி­லேயே நம்­பி­யுள்­ளது. சர்­வ­தேச சந்­தையில் விலை அதி­க­ரிக்கும் போது, இலங்­கை­யிலும் பெற்றோல், டீசல் மற்றும் மண்­ணெண்ணெய் விலைகள் கடு­மை­யாக உயரும். இது ஏற்­க­னவே சுமையைச் சுமந்து கொண்­டி­ருக்கும் போக்­கு­வ­ரத்துத் துறை­யையும், அனல் மின் நிலை­யங்கள் மூல­மான மின்­சார உற்­பத்­தி­யையும் முடக்­கி­விடும்.

‘இலங்கை சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து எரி­பொ­ருளை இறக்­கு­மதி செய்­கி­றது. அதே­போன்று வேறு சில நாடு­க­ளி­ட­மி­ருந்தும் இலங்கை எரி­பொ­ருளை இறக்­கு­மதி செய்­கி­றது.

இந்­நி­லையில் இந்த ஹோர்முஸ் நீரிணை முடக்­கப்­பட்டால் அது நிச்­ச­ய­மாக இலங்­கையின் பொரு­ளா­தா­ரத்தை பாதிக்கும்.

இலங்கை இந்த வழியில் இல்­லாமல் வேறு வழி­யூ­டாக எரி­பொ­ருட்­களை இறக்­கு­மதி செய்யும் நிலை ஏற்­படும். இது இலங்­கையின் பொரு­ளா­தாரம் பாதிப்­ப­தற்கு ஏது­வாகும்’ என்று கலா­நிதி கணே­ச­மூர்த்தி சுட்­டிக்­காட்­டு­கிறார்.

இது இவ்­வா­றி­ருக்க மத்­திய கிழக்கு நாடு­களில் சுமார் 16 இலட்சம் இலங்­கை­யர்கள் பணி­பு­ரி­கின்­றனர்.

இவர்கள் நாட்டின் அந்­நியச் செலா­வணி வரு­மா­னத்தில் பெரும்­பங்கு வகிக்­கின்­றனர். 2025 ஆம் ஆண்டில் மட்டும் இவர்கள் மூல­மாக பெரு­ம­ளவு வரு­மானம் இலங்­கைக்குக் கிடைத்­துள்­ளது.

போர் மூண்டால் இந்த வரு­மானம் முற்­றாகத் தடைப்­படும் என்று சர்­வ­தேச அர­சியல் ஆய்­வாளர் முன்னாள் அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க சுட்­டிக்­காட்­டு­கிறார்.

மேலும், 16 இலட்சம் மக்­களைப் பாது­காப்­பாகத் தாயகம் அழைத்து வரு­வது என்­பது மிகப்­பெ­ரிய சவா­லாகும். இத்­தனை பேரை ஏற்­றி­வரத் தேவை­யான போக்­கு­வ­ரத்து வச­திகள் இலங்­கை­யிடம் போதிய அளவில் இல்லை. இது ஒரு பாரிய மனி­தா­பி­மான நெருக்­க­டியைத் தோற்­று­விக்கும்.

இந்­தியா தனது எரி­பொருள் தேவையில் கிட்­டத்­தட்ட 40 சத­வீ­தத்தை இந்த நாடுகள் மற்றும் இந்த வழியின் மூல­மா­கவே பெறு­கி­றது. ஹோர்முஸ் நீரிணை மூடப்­பட்டால் இந்­தி­யாவின் பொரு­ளா­தாரம் கடு­மை­யாகப் பாதிக்­கப்­படும்.

‘‘இந்­தியா ரஷ்­யா­வி­ட­மி­ருந்து அதி­க­ளவு எரி­பொ­ருளை பெறு­கி­றது. ஆனால் இந்த நாடு­க­ளி­ட­மி­ருந்தும் ஹோர்முஸ் நீரிணை வழி­யாக எரி­பொ­ருளைப் பெறு­கி­றது.

எனவே, இந்த ஹோர்முஸ் நீரிணை மூடப்­பட்டால் இந்­தியா அதி­க­ளவில் ரஷ்­யா­வி­ட­மி­ருந்தே எரி­பொ­ருளை இறக்­கு­மதி செய்ய வேண்­டிய நிலைமை ஏற்­படும்’’ என்று கொழும்பு பல்­க­லைக்­க­ழ­கத்தின் சிரேஷ்ட விரி­வு­ரை­யாளர் கலா­நிதி கணே­ச­மூர்த்தி குறிப்­பி­டு­கிறார்.

இந்­தி­யாவின் பொரு­ளா­தாரம் பாதிக்­கப்­பட்டால் அது நேர­டி­யாக இலங்­கையை பாதிக்கும். ஏனெனில், இலங்­கையின் பெரும்­பாதி இறக்­கு­ம­திகள் இந்­தி­யா­வி­லி­ருந்தே நடை­பெ­று­கின்­றன.

இந்­திய உற்­பத்திப் பொருட்­களின் விலை உயர்வு இலங்­கையில் பண­வீக்­கத்தை மேலும் அதி­க­ரிக்கும். அத்­துடன் ஈரா­னுக்­கான இலங்­கையின் தேயிலை ஏற்­று­ம­தியும் பாதிக்­கப்­படும்.

வர­லாற்றுப் பாடமும் தற்­போ­தைய நிலையும்

1990களில் ஈராக் – குவைத் மோதலின் போது, அங்கு பணி­யாற்­றிய சுமார் 20,000 இலங்­கை­யர்­களை மீட்டு வரு­வ­தற்கே இலங்கை அரசு பெரும் போராட்­டத்தை எதிர்­கொண்­டது.

அன்று பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் எண்­ணிக்கை குறைவு. ஆனால் இன்று அந்த எண்­ணிக்கை பல இலட்­ச­மாக உயர்ந்­துள்­ளது. இது 1990களை விட சுமார் 80 மடங்கு அதிக சவா­லா­னது என்­பதை புரிந்­து­கொள்ள வேண்டும்.

2022ஆம் ஆண்டு ஏற்­பட்ட கடு­மை­யான பொரு­ளா­தார வீழ்ச்­சியில் இருந்து மீண்டு வரும் இலங்­கையால், மற்­று­மொரு அதிர்ச்­சியைத் தாங்க முடி­யாது.

அத்­துடன் தித்வா புய­லி­னாலும் இலங்கை மிகப் பெரிய நெருக்­க­டியை சந்­தித்­துள்­ளது. உலக வங்­கியின் அறிக்­கையின் படி கிட்­டத்­தட்ட 4.1 பில்­லியன் இழப்பை எதிர்­கொண்­டுள்­ளது.

ஐக்­கிய நாடுகள் அபி­வி­ருத்தித் திட்­டத்தின் மதிப்­பீட்டின் பிர­காரம் 16,000 கிலோ மீற்றர் வீதிகள் 300 கிலோ மீற்றர் ரயில் தண்­ட­வா­ளங்கள் 7 இலட்­சத்­துக்கும் மேற்­பட்ட கட்­ட­டங்கள், பாட­சா­லைகள், மருத்­து­வ­ம­னைகள், பாலங்கள், வீடுகள் என்­பன சேத­ம­டைந்­துள்­ளன.

இவ்­வா­றான நிலையில் இலங்கை மீண்­டு­வ­ரவும் மீள்­கட்­டு­மா­னத்தை முன்­னெ­டுக்­கவும் போராடிக் கொண்­டி­ருக்கும் நிலையில் இந்த ஹோர்முஸ் நீரிணை முடக்­கப்­பட்டால் நிச்­ச­ய­மாக இலங்­கையின் பொரு­ளா­தா­ரத்தை மிகப் பெரிய நெருக்­க­டிக்குள் தள்ளி விடும்.

இலங்கை என்ன செய்ய வேண்டும்?

அதனால் இலங்கை குறைந்­த­பட்சம் சில மாதங்­க­ளுக்குத் தேவை­யான எரி­பொ­ருளைச் சேமித்து வைத்துக் கொள்­வது அவ­சியம்.

எரி­சக்தி தேவைக்­காக சூரிய மற்றும் காற்று சக்தி போன்ற புதுப்­பிக்­கத்­தக்க ஆற்றல் மூலங்­களை விரை­வாக விரி­வு­ப­டுத்­து­வது அவ­சி­ய­மாகும்.

மத்­திய கிழக்கில் உள்ள இலங்­கை­யர்­களை அவ­சர காலத்தில் மீட்­ப­தற்­கான முறையான ஒரு பாதுகாப்புத் திட்டத்தை இப்போதே வகுத்துக்கொள்ள வேண்டும்.

எப்படியிருப்பினும் யுத்தங்கள் எப்போதும் பிரச்சி­னைகளுக்கு தீர்வுகளைத் தருவதில்லை என்பதே யதார்த்த­மாகும். மாறாக அவை புதிய அழிவுகளையும் நீண்டகாலப் பொருளாதாரப் பின்னடைவுகளையும் மட்டுமே ஏற்படுத்தும்.

ஹோர்முஸ் நீரிணை என்பது உலக எரிபொருள் சந்தையின் உயிர்நாடி. அது முடங்குவது என்பது உலகப் பொருளாதாரத்தின் அச்சாணியையே முறிக்கும் செயலாக அமையும். ஏற்கனவே நெருக்கடியிலிருந்து படிப்படியாக மீண்டு வரும் இலங்கை இத்தகைய நெருக்கடியில் இருந்து மீள்வது மிகவும் கடினமாகும்.

எனவே, இப்பிராந்தியத்தில் அமைதி நிலவுவது உலக நாடுகள் ஒவ்வொன்றின் பொருளாதார பாதுகாப்புக்கும் இன்றியமையாதது.

இராஜதந்திர ரீதியிலான பேச்சுகள் மூலம் இப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படுவதே காலத்­தின் கட்டாயமாகும். எப்படியிருப்பினும் இலங்கை திட்ட­மிடல்களுடன் இந்த நிலைமைகளுக்கு தயாராக வேண்டும்.

Share.
Leave A Reply

Exit mobile version