மன்னார் – இலுப்பைக்கடவை கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் இரவு நேர சுழியோடி நடவடிக்கையில் ஈடுபட்டு கடல் அட்டைகளைப் பிடித்த 36 சந்தேகநபர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
நேற்று புதன்கிழமை (01) இரவு வடமத்திய கடற்படை கட்டளைக்குச் சொந்தமான ‘புவனேக’ கப்பல் அதிகாரிகள் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்த பாரிய சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்கள் இலுப்பைக்கடவை மற்றும் நாச்சிக்குடா பகுதிகளைச் சேர்ந்த 22 முதல் 50 வயதுடைய நபர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட உபகரணங்கள் மேலதிக விசாரணைகளுக்காக மன்னாரிலுள்ள பூநகரி மீன்வள ஆய்வு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
பின்னர், கிளிநொச்சி மீன்வள அலுவலகத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய, கைப்பற்றப்பட்ட 1,750 கடல் அட்டைகளும் நாச்சிக்குடா கடற்பரப்பில் மீண்டும் விடுவிக்கப்பட்டன.