இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் ஆடை விவகாரத்தில் ஏற்பட்ட மோதல், ஒரு உயிரைப் பறிக்கும் அளவுக்குச் சென்றுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தனது மனைவி வீட்டில் இருக்கும்போது ‘நைட் டிரெஸ்’ (Night Dress) அணிவதை அவரது கணவர் நீண்டகாலமாக எதிர்த்து வந்ததாகக் கூறப்படுகிறது. பலமுறை கண்டித்தும் மனைவி அதனைப் பொருட்படுத்தாததால் ஆத்திரமடைந்த கணவர், மனைவியின் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீவைத்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர், உயிரிழந்த பெண்ணின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இக்கொடூரச் செயலைச் செய்துவிட்டுத் தப்பியோடிய கணவரைப் பிடிக்கக் காவல்துறையினர் தனிப்படை அமைத்துத் தீவிரமாக வலைவீசித் தேடி வருகின்றனர். ஒரு சிறிய ஆடை விவகாரத்திற்காகத் துணையை எரித்துக் கொன்ற இந்தச் சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த கவலையையும் அதிகரித்துள்ளது.

