தென்னிலங்கையின் பெலியத்தையிலிருந்து கொழும்பு மருதானை நோக்கிப் பயணித்த ‘சாகரிக்கா’ (Sagarika) விரைவு ரயில், இன்று காலை வடுவ பகுதியில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ரயிலின் பிரதான என்ஜின் மற்றும் பயணிகள் பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து விலகிப் பிரிந்ததில், ரயிலில் பயணித்த பல பயணிகள் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகிலுள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அலுவலக நேரமான காலை வேளையில் இந்த விபத்து நிகழ்ந்ததால், ஆயிரக்கணக்கான பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இந்தத் தடம் புரழ்வு காரணமாக, கடலோர ரயில் பாதையின் இரு பிரதான வழித்தடங்களும் முற்றிலுமாகத் தடைப்பட்டுள்ளன. இதன் விளைவாக, கொழும்பு மற்றும் மாத்தறை நோக்கிப் பயணிக்கவிருந்த அனைத்து ரயில் சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன அல்லது நீண்ட நேரத் தாமதத்துடன் இயங்குகின்றன. விபத்துக்குள்ளான ரயிலை மீண்டும் தண்டவாளத்தில் ஏற்றி, பாதையைச் சீரமைக்கும் பணிகளில் ரயில்வே திணைக்கள அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். போக்குவரத்து வழமைக்குத் திரும்பும் வரை பயணிகள் மாற்றுப் போக்குவரத்து வழிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version