இலங்கையின் சுதந்திர தினத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்.பல்கலைக்கழகத்தில் கறுப்புக் கொடி கட்டப்பட்டுள்ளது.கறுப்பு கொடி கட்டப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு பெரும் தொகையான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன், அங்கிருந்து கறுப்புக் கொடிகளும் அகற்றப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளும், வெளியிலும் குவிகக்ப்பட்டுள்ள பொலிஸார் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவிவருகின்றது.