ஒரு காலத்தில், பிரிட்டிஷ் அரசுக்கு மிகவும் விசுவாசமாக இருந்த அசாஃப் ஜா முசாஃபருல் முல்க் சர் மீர் உஸ்மான் அலி கான், 1911ாஆம் ஆண்டில் ஹைதராபாத் சமஸ்தானத்தின் அரியணையில் அமர்ந்தார்.
அவரது காலத்தில், அவர் உலகின் பணக்காரர்களில் ஒருவராக கருதப்பட்டார். ‘டைம்’ இதழ், 1937ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதி வெளியிட்ட தனது அட்டைப்படத்தில் அவரது படத்தை “உலகின் மிகப் பெரிய செல்வந்தர்” என்ற தலைப்பிட்டு வெளியிட்டது.
ஹைதராபாத் சமஸ்தானத்தின் மொத்த பரப்பளவு 80,000 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமாக இருந்தது. இது இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்தின் மொத்த பரப்பளவை விட அதிகம். அவர் பணக்காரராக இருந்ததென்னவோ உண்மைதான், ஆனால் அதே நேரம் அவர் மிகவும் கருமியாகவும் இருந்தார்.
சுதந்திர இந்தியாவில் சேர நிஜாம் காட்டிய பிடிவாதமும் அவர் எப்படி அரசின் முடிவுக்கு பணிந்தார் என்பதை விரிவாக விவரிக்கிறது இந்த காணொளி.