பூர்­வீக நிலத்தை விட்டு வெளியேறி அகதி வாழ்க்கை வாழ்ந்து வந்த வலி.வடக்கு பிர­தே­சத்தின் வயா­விளான் கிழக்கு மற்றும் பலாலி தெற்கு பகு­தி­களைச் சேர்ந்த மக்கள் 25வரு­டங்­களின் பின்னர் தமது சொந்­த­மண்ணை பார்­வை­யி­டு­வ­தற்கு அனு­மதி வழங்­கப்­பட்­டி­ருந்­த­போதும் ஈற்றில் கண்­ணீ­ரோடு ஏமாற்­றத்­துடன் திரும்­ப­வேண்­டிய துய­ரச்­சம்­ப­வ­மொன்று நடை­பெற்­றுள்­ளது.

வலி.வடக்கு வயா­விளான் கிழக்கு மற்றும் பலாலி தெற்கு பகு­தி­க­ளான ஒட்­ட­க­புலம், தென்­மூலை, வட­மூலை, தோல­கட்டி ஆகிய கிரா­மங்­களின் 197ஏக்கர் பரப்பில் மீள்­கு­டி­யேற்றும் செயற்­பாட்டின் முதற்­கட்­ட­மாக அவர்­களின் சொந்­த­மண்ணைப் பார்­வை­யி­டு­வ­தற்­காக

அனு­மதி நேற்­றைய தினம் வழங்­கப்­படும் என கடந்த புதன்­கி­ழமை யாழ்.மாவட்டச் செய­ல­கத்தில் இடம்­பெற்ற மீள்­கு­டி­யேற்ற நட­வ­டிக்கை குழுவின் கலந்­து­ரை­யா­டலின் பின்னர் அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது

vasalஇந்­நி­லையில் காலை 9 மணிக்கு 411குடும்­பங்­களைச் சேர்ந்­த­லர்கள் தங்கள் சொந்த நிலங்­களை பார்க்கும் ஆவ­லுடன் பல்­வேறு பகு­தி­க­ளி­லி­ருந்தும் குறித்த பிர­தே­சத்­திற்கு வருகை தந்­தி­ருந்­தனர். 197 ஏக்கர் பரப்­ப­ர­ளவு பார்­வை­யி­டு­வ­தற்கு அனு­ம­தி­ய­ளிக்­கப்­படும் என அறி­விக்­கப்­பட்­ட­போதும் சுமார் 50 ஏக்கர் மட்­டுமே பொது­மக்கள் பிர­வே­சிப்­ப­தற்கு அனு­மதி அளிக்­கப்­பட்­டது.

அதே­நேரம் விடு­விக்­கப்­ப­ட­வுள்­ள­தாக கூறப்­பட்ட பகு­தி­க­ளுக்­கான அனு­மதி மறுக்­கப்­பட்­ட­துடன் பிறி­தொரு கிரா­ம­சே­வகர் பிரிவில் உள்ள மக்­க­ளு­டைய காணி­க­ளுக்குச் செல்வே அனு­மதி அளிக்­கப்­பட்­டது. இச் செயற்­பாடு தமது சொந்த நிலத்தை பார்க்க வந்த மக்­க­ளுக்கு பெரும் ஏமாற்­றத்தை அளித்­துள்­ளது.

இவ்­வி­டயம் தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

புதிய அர­சாங்­கத்தின் நூறுநாள் வேலைத்­திட்­டத்தின் பிர­காரம் உயர்­பா­து­காப்பு வல­ய­மாக காணப்­படும் பிர­தே­சத்தில் ஆயி­ரத்து நூறு ஏக்கர் காணிகள் மக்­க­ளிடம் ஒப்­ப­டைக்­கப்­படும் செயற்­பா­டுகள் கட்­டங்­கட்­ட­மாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. அத­ன­டிப்­ப­டையில் வலி.வடக்கைச் சேர்ந்த மக்கள் தமது சொந்த நிலங்­களை பார்­வை­யி­டு­வ­தற்­காக அப்­பி­ர­தே­சத்தில் ஒன்று கூடினர்.

அவர்கள் அனை­வரும் வலி.வடக்கு பிர­தேச செய­லக அதி­கா­ரி­களால் பதிவு செய்­யப்­பட்டு அச்­சு­வேலி வயா­விளான் வீதி­யு­டாக குறித்த பகு­திக்குள் அழைத்துச் செல்­லப்­பட்­டனர். தோல­கட்டி, வட­முனை, தென்­முனை மற்றும் ஒட்­ட­கப்­புலம் எனும் பிர­தேசம் முற்­றாக விடு­விக்­கப்­படும் என அறி­விக்­கப்­பட்­டி­ருந்­த­போதும் ஒட்­ட­கப்­பு­லத்தின் ஒரு பகு­தியே மக்கள் பார்­வை­யிட முடிந்­துள்­ளது.

அத்­துடன் விடு­விக்­கப்­ப­டு­வ­தாக ஏனை கூறப்­பட்ட ஏனைய பகு­தியில் புதி­தாக கொங்­கிறீட் தூண்கள் நிறு­வப்­பட்டு முட்­கம்­பி­களால் வேலிகள் அமைக்கும் நட­வ­டிக்­கை­களை இரா­ணு­வத்­தினர் மேற்­கொண்­ட­வண்ணம் இருந்­துள்­ள­தையும் வயா­விளான் கிழக்கு ஜே.244 கிராம அலு­வலர் பிரிவின் கீழ் உள்ள அதி­க­மாக மக்கள் வாழ்ந்த இட­மான ஒட்­ட­கப்­புல கிராமம் முழு­மை­யாக இரா­ணு­வத்­தி­னரால் சூழப்­பட்­டுள்­ள­தையும் மக்கள் அவ­தா­னித்­தனர்.

மேலும் அப்­ப­கு­தி­களில் இரா­ணு­வத்­தினர் விவ­சாய செய்­கை­களில் ஈடு­பட்­டு­வ­ரு­வ­தையும் அயலில் உள்ள கிரா­மங்­களும் முழு­மை­யாக விடு­ப­டாது விவ­சாய நிலங்கள் மாத்­தி­ரமே விடு­விக்­கப்­பட்­டுள்­ள­தையும் மக்கள் நேரில் அவ­தா­னித்­துள்­ளனர்.

மக்­களின் ஆதங்கம்எங்­களின் வீடு­க­ளையும், கோயில்­க­ளையும் அழித்து இரா­ணுவம் விகா­ரை­களைக் கட்டி வைத்­தி­ருக்­கி­றது. எங்­களின் காணி­களைப் பார்க்க விடாமல் இடை­யி­லேயே மறித்து முள்­கம்பி வேலி அமைக்­கின்­றனர். முகாம்கள் இருக்­கிற வீடுகள் மட்­டுமே இருக்­கின்­றன. மற்ற வீடுகள் இருந்த இடம்­கூட தெரி­ய­வில்லை என பொது­மக்கள் ஆதங்­கத்­துடன் குறிப்­பிட்­டனர்.

இதே­வேளை பலாலி தெற்குப் பகு­தியில் பகுதி ஜே.252 கிர­ம­சே­வகர் பிரி­வு­ரீ­தி­யாக விடு­விக்­கப்­பட்­டுள்­ளது. ஆதனைப் பார்­வை­யிட்­ட­வர்கள், அக்­கா­ணி­களில் இருந்த வீடுகள் அனைத்தும் இருந்த இடம் தெரி­யாமல் அழிக்­கப்­பட்­டுள்­ளன. அப்­ப­கு­திகள் புதர்­க­ளா­கவும் பற்றைக் காடு­க­ளா­கவும் காணப்­ப­டு­கின்­றன.

தவிர அப்­பி­ர­தே­சங்­களில் சில வீடுகள் மட்­டுமே அழிக்­கப்­ப­ட­வில்லை. ஆனால் அந்த வீடு­களில் இரா­ணு­வத்­தினர் முகாம்­களை அமைத்­துள்­ளனர்.

எமது கண்­முன்­னேயே வேலி­களை அமைக்கும் பணி­களில் இரா­ணு­வத்­தினர் ஈடு­பட்­டனர். காணி­களைப் பார்க்க ஆவ­லுடன் சென்ற நாம் எல்­லைக்கு அப்பால் இருக்கும் எமது காணி­களைப் பார்க்க இரா­ணு­வத்­தி­ன­ரிடம் அனு­மதி கேட்டோம். ஆனால் அதற்கு இரா­ணு­வத்­தினர் மறுப்புத் தெரி­வித்து விட்­டனர் என்­றனர்.

இதே­வேளை விடு­பட்ட பலாலி தெற்கில் 90ஆம் ஆண்டு இடம்­பெ­யர்ந்த ஒருவர் கருத்து தெரி­விக்­கையில் நான் இடம்­பெ­யர்ந்து சென்­ற­போது விட்­டுச்­சென்ற தண்ணீர் இறைக்கும் பம்பி அவ்­வி­டத்­தி­லேயே இருப்­ப­தாக அந்த வீட்டின் உரி­மை­யாளர் தெரி­வித்தார்.

மன­து­ருகும் சம்­பவம்

அனு­மதி மறுக்­கப்­பட்­டதால் இரா­ணு­வத்­தி­ன­ருடன் மக்கள் வாக்­கு­வா­தத்­திலும் ஈடு­பட்­டனர். அத்­துடன் தமது நிலங்­களைப் பார்­வை­யிட முடி­யாத மக்­களில் சிலர் கண்­ணீ­ருடன் திரும்­பினர். அதே­நேரம் தமது சொந்த இடங்­களை பார்­வை­யிட்­ட­வர்கள் தங்கள் நிலத்தின் மண்ணைத் தொட்டு அள்­ளிய காட்சி பலரின் மன­தையும் உருகச் செய்­தது

இந்­நி­லையில் எங்­க­ளுக்குப் பொன்னும் வேண்டாம், பொருளும் வேண்டாம் எங்­க­ளு­டைய மண்­ணைண விடுங்கள் என மன்­றாட்­ட­மாக கேட்டுக் கொண்டு ஏமாற்­றத்­துடன் வீடு­க­ளுக்கு திரும்­பி­ய­தோடு விடுவிக்கப்படுவதாக கூறப்பட்ட இடங்கள் விடுவிக்கப்படாமை குறித்து மீள்குடியேற்ற நடவடிக்கை குழுவிடம் முறைப்பாடு செய்ய வேண்டும் எனவும் மக்கள் கேட்டுள்ளனர்.

தமது சொந்தக் காணிகளை பார்வையிடுவதற்காக வவுனியா, திருகோணமலை போன்ற இடங்களில் இருந்தும் மக்கள் ஆர்வத்துடன் வந்கை தந்திருந்ததுடன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் வடமாகாண சபை உறுப்பினர் த.சித்தார்த்தன், வலி.வடக்கு பிரதேச சபைத் தலைவர் சுகிர்தன் வலி.வடக்கு பிரதேச செயலர் சிறிமோகன் மற்றும் அரச அதிகாரிகள் ஆகியோரும் இதன்போது பிரசன்னமாகியிருந்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version