இங்கிலாந்து இளவரசர் ஹாரி ராணுவ பயிற்சிக்காக ஆஸ்திரேலியா சென்றிருந்தார். தனது பயிற்ச்சியை முடித்து கொண்டு நாடு திரும்பவதற்கு தயாரான இளவரசர் இங்கிலாந்து கிளம்பும் முன் சிட்னி ஓபரா ஹவஸில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பங்கேற்றார்.
அப்போது ராணுவ உடையில் இருந்த ஹாரியை 21 வயதுடைய விக்டோரியா மெக்ரீ என்ற பெண் திருமணம் செய்து கொள்ளுமாறு ஒரு பிளாக்கார்டில் எழுதி அவரிடம் காட்டி உள்ளார் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து விட்டார்.
இளவரசர் மீது கொண்ட அன்பினால் விக்டோரியா மெக்ரீ இளவரசர் கன்னம் கான்பிக்கும் போது அவரின் உதட்டில் முத்தம் கொடுக்க முன் வந்தார்.
இதை அறிந்து கொண்ட இளவரசர் சுதாரித்து கொண்டு அந்த பெண்ணிடம் இருந்து நசைசாகி நழுவிட்டார்.
பொது இடத்தில் இங்கிலாந்து இளவரசரிடம் உதட்டில் முத்தம் கொடுக்க வந்த இளம்பெண்ணால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
முத்தம் கொடுக்க வந்த பெண் ஒரு குழந்தையின் தாய் என்பது குறிப்பிடத்தக்கது.