ஐ.எஸ். தீவிரவாதிகள் கைதிகளை கூட்டாக நீச்சல் தடாகத்தில் மூழ்கடித்தும், காரில் வைத்து குண்டை வெடிக்க செய்தும், ஒரே கயிற்றில் கழுத்தை இறுக்கி கொலைசெய்யும் கொடூர காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றி உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள், பல நாடுகளிலும் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதேவேளை ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது.
அமெரிக்கா தலைமையில் ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டாலும், அவர்களுடைய ஆதிக்கம் நிலைத்து வருவது உலக நாடுகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்களிடம் சிக்கியவர்களை மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்து, அதுதொடர்பான வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றனர்.
பழைய காரில் கைதிகளை உள்ளே அடைத்து வைத்து, சுட்டுக் கொலை செய்யப்படுகின்றனர். மேலும், ஒரே கயிறில் 7 பேரை கட்டிவைத்து, கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகிள்ளன என்று டெய்லி மெயில் செய்தி வெளியிட்டு உள்ளது.
இதற்கிடையே அமெரிக்காவும் இராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்தி வருகிறது. ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக புதிய திட்டங்களையும் உலக நாடுகள் வகுத்து வருகின்றன. ஐ.எஸ். தீவிரவாதிகள் கொடூரம் மற்றும் நாடு கடந்த தாக்குதல்கள் பெரிதும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.