சென்னை: தனக்கும், ஓவியாவுக்கும் திருமணமாகிவிட்டதாக நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார். சிம்பு இசையில் மரண மட்ட பாடலை பாடினார் ஓவியா.
இந்நிலையில் சிம்புவுக்கும், ஓவியாவுக்கும் திருமணமாகிவிட்டதாகக் கூறி ஒரு போலி புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது.
இந்நிலையில் சிம்புவே இது குறித்து தெளிவுபடுத்தியுள்ளார்.
பொங்கல் ஸ்பெஷலாக ஓவியா டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது சிம்புவுடான திருமணம் பற்றி அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
நிகழ்ச்சிக்கு போன் செய்து பேசியுள்ளார் சிம்பு. அப்போது அவர் எனக்கும், ஓவியாவுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து, திருமணமும் முடிந்துவிட்டது என்று கூறியுள்ளார்.