சிரியாவில் குண்டுகள் நிரப்பப்பட்ட வாகனத்தை ஓட்டிச்சென்று தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவதற்கு முன்னதாக 11 வயது சிறுவன் தனது தந்தையின் கையில் முத்தமிட்டு பிரியாவிடை வாங்குவதுப் போன்ற புதிய வீடியோவை ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர்.
அலெப்போ நகரில் தற்கொலைப்படை தாக்குதலை நடத்த தயாராக இருக்கும் ஒரு வாகனத்தை தந்தையும் மகனும் பார்வையிடுகின்றனர்.
பின்னர், தனது கையில் முத்தமிட்டு பிரியாவிடை பெறும் 11 வயது மகனான அபு இமாரா அல் ஒம்ரி என்ற சிறுவனை கட்டித்தழுவி அவர் வழியனுப்பி வைக்கிறார்.
வனாந்திரமான ஒரு இடத்தில் முக்கிய தலைவரிடம் உத்தரவை பெறும் அபு, குண்டுகள் நிரப்பப்பட்ட வாகனத்தை ஓட்டிசென்று காஸி என்ற இடத்தில் சிரியா ராணுவத்தினர் மோதச் செய்து வீரமரணம் அடைகிறார்.
தேசப்பற்றுப் பாடலின் பின்னணியுடன் மேற்கண்ட காட்சிகள் கொண்ட வீடியோவை ஐ.எஸ். தீவிரவாதிகள் தற்போது வெளியிட்டுள்ளனர்.
இந்த வீடியோவானது, தற்கொலைப்படை தாக்குதல்களில் ஐ.எஸ். தீவிரவாதிகள் அதிகமாக சிறுவர்களை பயன்படுத்தி வருவதாக குற்றம்சாட்டும் மேற்கத்திய ஊடகங்களின் வாதங்களுக்கு பலம் சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
அதேவேளையில், மேலும் சில சிறுவர்களை தங்கள் இயக்கத்தில் சேர்ப்பதற்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திவரும் ஊடக பிரசாரமாகவும் இந்த புதிய வீடியோ பார்க்கப்படுகிறது.