இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் பிரபாகரன் தொடர்பில் கூறிய கருத்து அவரது தனிப்பட்ட கருத்தாகும்.
அது கட்சியின் நிலைப்பாடாகாது. அவர் கூறிய கருத்து தேர்தலை இலக்கு வைத்ததாகக் கூட இருக்கலாம் என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார தெரிவித்தார்.
மேலும் பிரபாகரன் எவ்வாறானவரென்பது தொடர்பில் இந்நாட்டு மக்களுக்கு கூறி விளக்க வேண்டிய அவசியமில்லை.
எனவே இவ்வாறான தனிப்பட்ட கருத்துக்களை விடுத்து தற்போது ஐக்கியத்துடன் வாழும் தமிழ் சிங்கள முஸ்லிம் மக்களின் நலனுக்காக போராட வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைக்காரியாலயத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியளாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
பிரபாகரன் தற்போது இருந்திருந்தால் பிரதமராக இருப்பார் என .இராஜாங்க அமைச்சர் விஜயகலா தெரிவித்திருந்தார்.
ஆனால் பிரபாகரன் என்ன செய்தார் அவர் எவ்வாறானவர் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.
அவர் பிரதராக இருப்பாரா அல்லது இருக்கமாட்டாரா என்பது தற்போது பிரச்சினை இல்லை. மக்களின் ஐக்கியத்துக்காக செயற்பட வேண்டிய செயற்பாடுகளே தற்போது முக்கியமாகும்.
தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் தமிழ் மக்களுக்கும் தேவையானதை நாம் அடையாளப்டுத்தி வருகின்றோம்.
இவ்வாறான நிலையில் பிரபாகரன் பிரதமராக இருப்பார் என்ற விடயம் எங்களுக்கு தேவையில்லாத கூற்றாகும்.
தனிப்பட்ட வகையில் அவர் அந்த கருத்தை கூறியிருக்கின்றார். அக்கூற்று தொடர்பில் கருத்து தெரிவிக்க நாம் விரும்பவில்லை.
தேர்தலை இலக்குவைத்து நடத்தப்பட்ட நாடகமாகவே நாம் இதனை கருதுகின்றோம். கட்சியின் நிலைப்பாடு இதுவல்ல. வடக்கு மக்களை தேர்தல் இலக்கு வைத்து கூறிய கருத்தே இதுவாகும் என்றார்.
பிரபாகரன் இருந்திருந்தால்……
• பிரபாகரன் இருந்திருந்தால்…. விஜயகலா மகேஸ்வரன் அக்கா கிளிநொச்சியில் காலடி எடுத்து வைத்திருக்க முடியுமா??
• விஜயகலா அக்கா ஐ.தே. கட்சி சார்பில் வடமாகாணத்தில் தேர்தலில் வேட்பாளராக நின்று பாராளுமன்றம் போயிருக்க முடியுமா? புலிகள் தலையில் சூடு அல்லவா வைதிருப்பார்கள்.
• கிளிநொச்சி வாழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக கதைவிட்டிருக்கிறீர்கள் என்பது புரியாதா??
• பிரபாகரனை பற்றி கிளிநொச்சியில் வைத்து இப்படி புகழ்ந்து பேசினால் சிவஞானம் சிறிதரனின் வயிற்றில் அல்லவா புளியை கரைக்கும்.
• வல்வெட்டித் துறையாரையும் உசுப்பேத்தி விட்டுள்ளீர்கள். பேஷ்..!! பேஷ்..! நல்லது.
• பிரபாகரன் பற்றி இவ்வளவு வீரமாக பேசிய நீங்கள்… “தமிழீழ தேசிய தலைவர்” என வாய் தடுமாறி சொல்லிவிட்டு (sorry ) மன்னிப்பு கேட்டுள்ளீர்கள் ஏன்?? பிரபாகரன் தமிழீழ தேசிய தலைவர் இல்லையா??