கிளிநொச்சி பொன்னகர் பகுதியில் தோட்டக்காணியினை உழுது கொன்டிருந்த உழவு இயந்திரம் வெடிவிபத்தில் சிக்கியதில் அதன் சாரதி படுகமடைந்துள்ளார் கிளிநொச்சி பொனனகர் பகுதியில் இன்று (11-12-2016)பகல் உழவு இயந்திரத்தினால் தோட்டக்காணியினை உழுது கொன்டிருந்த போது கலப்பையில் சிக்கி வெடிபொருள் ஒன்று வெடித்துள்ளது
இதில் உழவு இயந்திரத்தின் ; சாரதி படுகமடைந்த நிலையில் கிளிநொச்சி பொதுவைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் போது கல்மடுநகர் சம்புக்குளம் இராமநாதபுரத்தைச் சேர்ந்த பொன்னுத்துரை சடானந்தம் (வயது 39) என்பவரே இவ்வாhறு காயமடைந்துள்ளார்.