வறட்சியாக காணப்பட்ட சகாரா பாலைவனம் முதன் முறையாக பனிமழையால் நிரம்பி பார்ப்பவர்களை ஆச்சரியத்துக்குள்ளாக்கியுள்ளது. இச் சம்பவம் அல்ஜிரியாவின் அன்செப்ரா நகரில் பதிவாகியுள்ளது.
1979 ஆம் ஆண்டில் அல்ஜிரியா அன்செப்ரா பாலைவனப் பகுதியில் இவ்வாறான சம்பவம் பதிவாகியிருந்த நிலையில் 37 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தற்போது பனிப் பொழிவுகள் நிகழ்ந்துள்ளதாக அங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.
இப் பனிப்பொழிவுகளுடன் சாகாரா நிலத்தின் தோற்றம் மிகவும் அழகாக காட்சியளிப்பதை புகைப்படக் கலைஞர் கரிம் பௌஞ்செட்டா என்பவர் பதிவு செய்துள்ளார்.
உலகில் மிகப் பெரிய வரறட்சி பாலைவனமான சகாரா மீண்டும் பசுமைக்கு திரும்புவதற்கு 15000 ஆண்டுகள் தேவை என ஆய்வாரள்கள் கூறிவந்த நிலையில் 1000 அடிக்கு மேற்பட்ட மலைப்பகுதிகளில் பனிப்பொழிவு இடம்பெற்றிருப்பது வட ஆபிரிக்க பிராந்தியத்திற்கு அழகூட்டிய நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.