தொடங்கொட பொலிஸ் பிரிவில் உடவத்தகொட பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த பிரதேசத்திலுள்ள வீடொன்றின் அறையிலிருந்து தலை மற்றும் கைகளில் இரத்தம் கசிந்த நிலையில் குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளவர் 54 வயதுடைய உடவத்தகொட – தொடங்கொட பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
இது தொடர்பில் தொடங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.