பாராளுமன்றத்தின் மீது எவரும் குண்டுத்தாக்குதல்களை மேற்கொள்ள உள்ளார்களா? என கேள்வி எழுப்பிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, நாட்டில் திடீரென ஏன் இத்தனை சோதனை சாவடிகள் எனவும் கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றத்தின் இன்றைய (16) அமர்வில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர், நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எதுவும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதா? பிங்கிரிகமயிலிருந்து நான் பாராளுமன்றத்துக்கு வரும்வழியில் 21 பொலிஸ் சோதனை சாவடிகளை கடந்து வர வேண்டியிருந்தது.
இதில் 10 இடங்களில் எனது வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தார்கள் எனவும் தெரிவித்தார்.
பிங்கிரியவிலிருந்து பாராளுமன்றத்துக்கு வரும்வரையில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர ஏன் இத்தனை சோதனை சாவடிகளை அமைத்துள்ளார்?
பாராளுமன்றம் மீது எவரும் குண்டுத்தாக்குதல்கள் நடத்த உள்ளார்களா? இல்லை என்றால் பிரபாகரன் மீண்டு வந்து குண்டு தாக்குதல் நடத்த உள்ளாரா? எதற்காக இத்தனை சோதனை சாவடிகள்? எனவும் அவர் இதன்போது கேள்வி எழுப்பினார்.