வறக்காப்பொல பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவிற்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பில் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸ் அதிகாரிகள் நண்பர் ஒருவரின் திருமணத்தில் கலந்துகொண்டுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது இச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சம்பவத்தை நேரில் பார்த்த வழிப்போக்கர் ஒருவர் பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அறிவித்ததையடுத்து வறக்காப்பொல பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து மோதலை கட்டுப்படுத்தினர்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் கம்பஹா மற்றும் சிலாபம் நிர்வாக பிரிவு அதிகாரிகளே இவ்வாறு கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பொலிஸ் அதிகாரிகள் குடிபோதையில் இருந்ததாகவும், வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவத்தில் மோதலில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களில் இருவர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.