கிளிநொச்சி கொக்காவில் பகுதியில் இன்று இரவு இடம்பெற்ற ஹயஸ் வாகன விபத்தில் சம்பவ இடத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
கொழும்பில் இருந்து யாழ் நோக்கி சென்ற ஹயஸ் ரக வாகனம் கொக்காவில் பகுதியில் கண்டி நெடுஞ்சாலையில் நிறுத்தி வைக்கப்பட்ட கனரக வாகனத்துடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹயஸ் வாகனத்தில் வந்த வடமராட்சி மாலிசந்தை பகுதியைச்சேர்ந்த நால்வர் சம்பவ இடதில் உயிரிழந்தனர் ஒருவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் தற்போது கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.