ஆர்ஜென்டீனாவில் அழகுராணியாத் தெரிவு செய்யப்பட்ட யுவதி ஒருவர், ஏற்கெனவே இரு வயதான குழந்தைக்குத் தாய் என்பது தெரிய வந்ததால் அவரின் அழகுராணிப் பட்டம் பறிக்கப்பட்டுள்ளது.
தமாரா பெர்னாண்டஸ் எனும் இந்த யுவதி, ஆர்ஜென்டீனா வில் அண்மையில் நடை பெற்ற ‘மிஸ் முன்டோ நியூகென்’ அழகுராணிப் போட்டியில் பங்கு பற்றினார்.
கடந்த 25 ஆம் திகதி நடைபெற்ற இறுதிச் சுற்றுப் போட்டிகளின் முடிவில் தமாரா பெர்னாண்டஸ் முதலிடம் பெற்று, மிஸ் முன்டோ நியூகென் 2016 அழகுராணியாக தெரிவுசெய் யப்பட்டு முடிசூட்டப் பட்டார்.
எனினும் அவர் ஏற்கெனவே குழந்தையொன்றுக்குத் தாயானவர் என்பதும் அப் பெண் குழந்தைக்குக்கு இரு வயதாகுகிறது என்பதும் போட்டி ஏற்பாட்டாளர் களுக்குத் தெரிய வந்தது.
இந்த அழகுராணிப் போட்டியில் தமராவிடம் தோல்வியுற்ற யுவதிகள் இது குறித்து ஆட்சேபம் தெரிவித்தனர். அதையடுத்து இந்த அழகுராணி பட்டத்தை தமாராவிடமிருந்து போட்டி ஏற்பாட்டாளர்கள் பறித்துள்ளனர்.
தமாரா பெர்னாண்டஸ் அழகுராணியாகத் தெரிவுசெய்யப்பட்டு மறுநாளே இது குறித்த, இப்போட்டி ஏற்பாட்டாளர்கள் தமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்திலிருந்து, தமராவின் புகைப்படத்தை நீக்கினர்.
அதன் பின்னரே அழகுராணி பட்டத்தை பறிக்கும் தீர்மானம் தமாராவுக்கு அறிவிக்கப்பட்டது. 24 வயதான தமாரா பெர்னாண்டஸ், மொடலபாகப் பனியாற்றுபவர் உலக அழகு ராணி போட்டியில் ஆர்ஜென்டீனா சார்பில் பங்குபற்றுவதற்கு அவர் திட்டமிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தான் ஒரு குழந்தைக்குத் தாய் என்பதை தமரா இரகசியமாக வைத்திருக்க வில்லை. அவர் தனது மகளின் புகைப்படங்களை அடிக்கடி சமூக வலைத்தளங் களிலும் வெளியிட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
தான், ஒரு குழந்தையின் தாய் என்பதை இந்த அழகுராணி போட்டி ஏற்பாட்டாளர்கள் அறிந்திருந்தனர் எனவும் அது பரவாயில்லை எனக் கூறினர் எனவும் தமரா பெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார்.
இந்த அழகுராணி போட்டியில் பங்குபற்றுமாறு தன்னை வலியுறுத்தியவர்களும் இப்போட்டி ஏற்பாட்டாளர்கள் தான் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
”இப் போட்டியில் பங்குபற்றுமாறு அவர்கள் பேஸ் புக் மூலம் எனக்கு அழைப்பு விடுத்தனர். நான் இதற்கு மறுப்பு தெரிவித்தேன். ஆனால், ஒரு தாயாக இருப்பது குறித்து இப் போட்டி விதிகளில் எதுவும் கூறப்படவில்லை எனக் கூறி இதில் பங்குபற்றுமாறு அவர்கள் வலியுறுத்தினர்.
நான் எப்போதும் எனது மகளுடன் இருக்கிறேன். அவளை நாள் ஒரு போதும் ஒளித்து வைக்கவில்லை. நான் எனது மகளைப் பெற்றபோது, அது ஒரு தவறு என மொடலிங் துறையிலுள்ள பலர் கூறினர்.
ஆனால், அவள் காதலினால் பிறந்தவள். நாம் தாய்மார்கள் என்பதற்காக எமது கனவுகளைத் தொடர்வதற்கு அனுமதி அளிக்கப்படாமலிருப்பது தவறு” எனவும் தமாரா பெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார்.