பாடசாலை சீருடையுடன் கடலில் பாய்ந்து தற்கொலை செய்ய முயன்ற 17 வயதான மாணவி காப்பற்றப்பட்டுள்ளார்.
நேற்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், திக்வெல்ல காவற்துறையினரே குறித்த மாணவியை காப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவற்துறைக்கு முன்னாள் கடலில் பாய்ந்த இந்த மாணவியை கண்ணால் கண்ட பிரதேசவாசிகள், காவற்துறையிடம் அறிவித்துள்ளனர்.
பின்னர் உடனடியாக செயற்பட்ட திக்வெல்ல காவற்துறை அதிகாரிகள், 100 மீட்டருக்கும் அதிகளவில் இழுத்து செல்லப்பட்ட அந்த மாணவியை காப்பாற்றியுள்ளனர்.
அதிகாரிகள் தமது உயிரையும் பொருட்படுத்தாமல் செயற்பட்டமை தொடர்பாக பிரதேசவாசிகள் பாராட்டியுள்ளனர்.
திக்வெல்ல காவற்துறை பிரிவிற்கு உட்பட்ட கிராமப்பறத்தை சேர்ந்த குறித்த மாணவி, நண்பி ஒருவர் ஊடாக பெற்று கொண்ட தொலைபேசி இலக்கத்தின் மூலம் இராணு வீரர் ஒருவருடன் தொடர்பு கொண்டுள்ளார்.
எனினும் அந்த இராணுவ வீரர் குறித்த மாணவியுடன் இரண்டு மாதங்கள் கதைக்காத காரணத்தினால் மனவேதனை அடைந்து இவ்வாறு தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக காவற்துறை விசாரணையில் தெரியவந்தள்ளது.
தற்போது அந்த மாணவி பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.