காவத்தை கலல்எல்ல பிரதேசத்தில் மேய்ந்து கொண்டிருந்த பசுக்கன்று ஒன்றின் பின்தொடையில் ஒரு பகுதியை வெட்டி சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒரு நபரை கைது செய்ததாக காவத்தை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அட்டகலன்பன்ன என்ற இடத்தைச் சேர்ந்த 53 வயதான நபரே கைதுசெய்யப்பட்டவராவார்.
cதனது கன்றுக் குட்டியின் தொடையில் பாரிய காயம் இருப்பதைப் பார்த்த கன்றின் உரிமையாளர் இது குறித்து தேடிப் பார்த்த போது ஒரு வீட்டில் இறைச்சி சமைப்பதைக் கண்டுள்ளனர். இது தொடர்பாக சந்தேகமடைந்த மாட்டின் உரிமையாளர், பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.
பின்னர் பொலிஸார் வந்து இந்த நபரிடம் விசாரணை நடத்திய போது கன்றுக் குட்டியின் பின் தொடையில் ஒரு பகுதியை வெட்டி எடுத்ததை ஏற்றுக்கொண்டுள்ளார்.
தாம் இரவு மது அருந்தியிருந்ததாகவும் அதனால் இறைச்சி சாப்பிடும் ஆசை ஏற்பட்டதால் கன்றுக் குட்டியின் பின் தொடையில் ஒரு பகுதியை வெட்டி எடுத்ததாகவும் இந்த நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
கன்றுக் குட்டியின் தொடையை வெட்ட இந்த நபர் பயன்படுத்திய கத்தியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.