தனது தாயாரை மாட்டுத் தொழுவத்தில் வைத்து பராமரித்த தனது தங்கையின் செயலை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார் வெளிநாட்டில் இருந்து வந்த குடும்பப் பெண்.
யாழ் மானிப்பாய் பகுதியில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது, 3 பிள்ளைகளைப் பெற்று வளர்த்த தாயாருக்கு ஏற்பட்ட இந் நிலையை கண்டு தங்கை மற்றும் தங்கையின் கணவன் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முற்பட்டுள்ளார் குறித்த குடும்பப் பெண்.
பாரிசவாதத்தால் பாதிக்கப்பட்ட கணவனையிழந்த தனது தாயாரைப் பராமரிப்பதற்காக மாதந்தோறும் தங்கைக்கு பணம் அனுப்பி வந்துள்ளார் குறித்த குடும்பப் பெண்.
ஆனாலும் தனது தாயாரையும் பராமரிக்காது சகோதரி அனுப்பிய காசில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளார் யாழில் உள்ள தங்கை.
அத்துடன் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் தங்கையின் கணவரும் அந்த நிறுவனத்தில் பணியாற்றாமல் வேலையில் இருந்து நின்று விட்டு தாயாருக்கு அனுப்பிய காசிலேயே சாப்பிட்டு வந்துள்ளதும் கண்டு கொதித்துள்ளார் குறித்த பெண்.
தாயாரை வைத்து பராமரிக்காது தொடர்பாக தங்கையிடம் நியாயம் கேட்ட போது தங்கையின் கணவரால் தாக்குதலுக்கு உள்ளாக முற்பட்டதாகவும் தெரியவருகின்றது.
மாட்டுத் தொழுவத்தில் பழைய மெத்தை ஒன்றில் தாயாரைக் கிடத்தி வைத்திருந்ததாகவும் நுளம்பு வலை கூட தாயாருக்கு போடாது பாதுகாப்பான, துப்பரவான முறையில் தாயாரை வைத்திருக்காது இருந்ததுடன் குறித்த தாயாரது தலையில் பெருமளவு பேண்கள் பரவி தாயாரது தலை புண்ணாகி இருந்ததாகவும் தெரியவருகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பாக குடும்பப் பெண் சட்ட நடவடிக்கை எடுக்க ஆயத்தமாகியுள்ளார்.