இந்தத் தம்பதிக்குத் திருமணமாகி 4 ஆண்டுகளாகிறது, ஒன்றரை வயதில் குழந்தை உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு அப்பெண் காணாமல் போய் விட்டார். நாட்கள் செல்லச் செல்ல அவரது பெற்றோர் கவலை அடைந்தனர், இந்த நிலையில் காணாமல் போன பெண், தனது தாய் மாமாவுக்குப் போன் செய்தார்.
தன்னை தனது கணவர் விற்று விட்டதாக அவர் கூறியதைக் கேட்டு தாய்மாமா அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அப்பெண்ணின் பெற்றோரிடம் விவரத்தைக் கூறினார். பெற்றோர் உடனடியாக போலீஸில் புகார் கொடுத்தனர்.
அங்கு அரவிந்த் மீனா என்ற நபரிடம் தனது மனைவியை விற்றுள்ளார். பி்ன்னர் பணத்தை வாங்கிக் கொண்டு கிளம்பிப் போய் விட்டார். மீனா, அப்பெண்ணை தனது வீட்டில் அடைத்து வைத்தார்.
பின்னர் சசாதா கிராமத்தைச் சேர்ந்த திலீப் பாலிவால் என்பவரிடம் அப்பெண்ணை விற்றுள்ளார். பாலிவால் தனது வீட்டுக்கு அப்பெண்ணைக் கூட்டி வந்து கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கொண்டுள்ளார்.
பின்னர் அவரை சரமாரியாகவும் தாக்கியுள்ளார். சாதாரண பைக் வாங்குவதற்காக அப்பெண்ணின் கணவர் இந்த அட்டகாசத்தைச் செய்துள்ளார். தற்போது 3 பேருமே தலைமறைவாகி விட்டனர். அவர்களைப் பிடிக்க போலீஸார் வலை வீசியுள்ளனர்.