சமீபகாலமாக மலேசியாவில் வைத்து பல விடுதலைப்புலி சந்தேக நபர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்படுகின்றனர். இவர்களது கைதுகள் தொடர்பாக மலேசிய பயங்கரவாத தடுப்பு பிரிவினர் வெளிப்படையாகவே தகவல் வெளியிட்டு, இவர்களில் சிலரை இலங்கைக்கும் நாடு கடத்தியுள்ளனர்.
எமக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில், இப்படி கைது செய்யப்பட்ட புலி சந்தேக நபர்கள் அனைவருமே விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் முன்பு ஏதோ ஒரு வித தொடர்பில் இருந்தவர்கள், அல்லது, தற்போதும் வெளிநாட்டு விடுதலைப் புலிகளின் பல்வேறு பிரிவுகளில் ஒன்றுடன் தொடர்பில் உள்ளவர்கள்.
நாம் அறிந்தவரை தொடர்பே இல்லாத யாரும் சிக்கவில்லை. பிரபாகரனே தலையில் கொத்து வாங்கி கபால மோட்சம் பெற்று போய்ச் சேர்ந்துவிட்ட நிலையில், இவர்கள் எதற்கு புலிக்கொடியை ஆட்டுகிறார்கள் தெரியவில்லை. எப்படியோ, ஆசாமிகள் வசமாக சிக்கிக் கொள்கிறார்கள்.
மலேசிய பயங்கரவாத தடுப்பு பிரிவினர் இவர்களை கைது செய்யும் விதத்தை பார்த்தால், மிக தெளிவாக, கையில் சகல விபரங்களுடனும் சென்றே, ஒவ்வொருவராக பிடிக்கிறார்கள். அதாவது, சந்தேக கேஸில் பிடித்து விசாரிக்கையில் இவர்களது புலி கனெக்ஷன் தெரிய வந்தது என்று எந்த கேஸிலும் இல்லை.
இதன் அர்த்தம் என்னவென்றால், எங்கிருந்தோ கிடைக்கும் உளவுத் தகவல்களின் அடிப்படையில் நடைபெறும் கைதுகள் இவை. கைது செய்யப்படும் ஆட்களின் பெயர், விபரங்கள், முகவரி அனைத்தும் துல்லியமாக தெரிந்துகொண்டு போய் கைது செய்கிறார்கள்!
இவ்வளவு துல்லியமான உளவுத் தகவல்கள், மலேசிய உளவுத்துறையினருக்கு எங்கிருந்து கிடைக்கின்றன?
உளவுத்துறை வட்டாரங்களில் நாம் விசாரித்தபோது கிடைத்த தகவல்களின்படி, இந்த உளவுத் தகவல்கள் லண்டனில் இருந்து ஒரிஜினேட் பண்ணுகின்றன என்று தெரிகிறது. லண்டனில் உள்ள ஈழத் தமிழர் இயக்க முக்கியஸ்தர் ஒருவர், மற்றும் அங்குள்ள தமிழ் வர்த்தகர் மூலமாக போகும் தகவல்கள் இவை.
ஆனால், லண்டன் தகவல்கள் நேரே மலேசியா போவதில்லை. மற்றொரு நாட்டு உளவுத்துறை ஊடாக போகின்றன. அந்த மற்றொரு நாடு இலங்கை இல்லை என்பதே, இதிலுள்ள பெரிய சஸ்பென்ஸ்!