மக்களின் வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நாளை (18) நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.
ருவக்வெலிசாயவில் ஜனாதிபதியாக பதவிபிரமாணம் செய்த பின்னர், அவர் நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார்.
முற்பகல் 11 மணிக்கு கடமைகள் ஆரம்பம்
மக்களின் வாக்குகளால் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட கோட்டபய ராஜபக்ஷ, அநுராதபுரம் ருவன்வெலிசாயவுக்கு அருகில் நாளை (18) முற்பகல் 11 மணிக்கு உறுதிமொழி எடுத்துக்கொண்டு தனது கடமைகளை ஆரம்பிக்கவுள்ளார்.