ஊடகம் எனும் படை.
பல விதமான விளக்கம் கொள்ளக் கூடிய ‘சுதந்திரம்’ என்னும் சொல்லுக்கு, நாம் அளிக்கக் கூடிய வரையறை: ‘சட்டம் அனுமதிப்பதைச் செய்ய முடிவதே சுதந்திரம்’ என்பதாகும்…. இந்த விளக்கம்தான் நமக்கு எல்லா நேரங்களிலும் உதவியாக இருக்கும்.
நமது திட்டத்திற்கு உகந்த சட்டங்களை இயற்றவோ நீக்கவோ நமக்கு அதிகாரம் இருக்கும் காரணத்தினால், மேற்சொன்ன வரையறைப்படி அந்த ‘சுதந்திரம்’ என்பது முழுமையான நம்முடைய கட்டுப்பாட்டில் இருக்கும்.
நாம் ஊடகத்தின் விசியத்தில் பின்வருமாறு நடந்துகொள்ள வேண்டும்: இன்றைய சமுதாயத்தில் ஊடகத்தின் பங்கு என்ன? நம் நோக்கங்களை நிறைவேற்றுவதற்குப் பெரும் சாதனமாகப் பயன்படும் இது, மக்களை உலக மோகத்தின்பால் ஈர்த்து, அதன் பக்கம் அவர்களை உற்சாகத்தோடு அழைக்கும் பணியை மேற்கொள்கிறது.
அல்லது அரசியல் கட்சிகளின் சுயலாபங்களுக்காக குரல் கொடுக்கும் வேலையைச் செய்கிறது.
பெரும்பாலும் ஊடகம் என்பது உப்புச் சப்பில்லாத விஷயங்களை மக்களுக்கு வழங்குவதாகவும், பொய்யான, அநீதியான ஒன்றாகவுமே விளங்குகின்றது.
யாருடைய லாபத்திற்காக இந்த ஊடகம் செயற்படுகிறது என்பது பற்றிய அறிவு, பெரும்பாலானோருக்குச் சிறிதளவும் கூட இருப்பதில்லை.
இந்த ஊடகம் என்னும் குதிரைக்குக் கடிவாளம் இட்டு, அதன் முதுகில் ஏறிச் சவாரி செய்வோம்.
அனைத்து வகையான அச்சு ஊடகச் செய்தித் தயாரிப்புக்களுக்கும் கடிவாளம் இட வேண்டும்.
செய்தித் தாள்களின் தாக்குதலில் இருந்து நாம் தப்பித்துவிட்டு, துண்டுப்பிரசுரங்களையும், புத்தகங்களையும் விட்டுவைத்தால் அது சரியாக இருக்குமா? அதன் தாக்குதல்களுக்கு நாம் இலக்கானால் நம் நடவடிக்கைகள் அர்த்தமுள்ளதாகாது.
எனவே ஊடகத் துறையை மிகச் செலவு பிடிக்கும் துறையாக மாற்றி அரசாங்கத்திற்கு பெருத்த வருவாய் ஏற்படுத்தித் தருவதாக ஆக்க வேண்டும்.
பதிப்பகமோ, ஆக்கமோ இவற்றில் எந்த ஒன்றைத் தொடங்குவதாக இருந்தாலும், அதற்காக அரசாங்கத்திற்கு மிகப்பெரிய அளவில் அவர்கள் முற்தொகை செலுத்த வேண்டும்.
மேலும், முத்திரைத் தாள் வரியும் கட்ட வேண்டும். நம்மிடம் அவர்கள் கட்டிய முன்தொகை, அரசாங்கத்தைத் தாக்கமாட்டார்கள் என்ற உத்தரவாதத்தையளிக்கும்.
இந்தத் தாக்குதலாக இருந்தாலும், கொஞ்சம்கூடக் கருணை காட்டாமல் வாங்கிய முன்தொகையிலிருந்து அதிகளவான அபராதங்களை உடனடியாக விதிக்கப்படும்.
இந்த முத்திரைத்தாள் வரி, முன்தொகை, அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் அரசாங்கத்திற்கு பெரும் லாபம் கிடைக்கும்.
எனினும் பண பலம் படைத்த அரசியல் கட்சிகள் புகழ் அடையும் நோக்கில், இந்த அபராத விஷயங்களைப் பொருட்படுத்தாமல் நம்மைத் தாக்கிப் பிரச்சாரம் செய்வதற்கு வாய்ப்பு உள்ளது என்பதையும் மறுக்க முடியாது.
முதல்முறையாக எச்சரிக்கப்படும் அவர்கள், தொடர்ந்து இரண்டாவது முறையும் அவ்வாறே செய்தால், இந்தச் செய்தி நிறுவனம் இழுத்து மூடப்படும்.
நமது அரசாங்கத்தின் புனிதத் தன்மையை எதிர்த்து விரல் நீட்டக்கூடிய எவரும் தண்டிக்கப்படாமல் இருக்கமாட்டார்கள். நியாயமான, எந்தத் தகுந்த காரணமும் இல்லாது அநாவசியமாக கலகத்திற்கு மக்களைத் தூண்டிவிட்டதாகக் கூறி அந்தச் செய்தி நிறுவனம் இழுத்து மூடப்படும்.
அதே சமயம் நீங்கள் மற்றொரு விஷயத்தை மறக்கக் கூடாது. நம்மைத் தாக்கியெழுதும் பத்திரிகைகளில் சில, நம்மாலேயே நிறுவப்பட்டவையாக இருக்கும்.
அந்தப் பத்திரிகைகளோ நம்மை விமர்சிப்பது போல் தோன்றினாலும், நாம் எதில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என ஏற்கனவே தீர்மானித்துவிட்டோமோ அதைப் பற்றி மட்டுமே விமர்சித்து எழுதும்.
ஊடகங்களைக் கட்டுப்படுத்துவோம்.
நம்முடைய கட்டுப்பாட்டை மீறி, ஒரு சிறு அறிவிப்புக் கூட மக்களிடம் சென்று சேராது. இதற்கான நடவடிக்கைகளை இப்போதே தொடங்கிவிட்டோம்.
சர்வதேச செய்தி ஏஜென்சி நிறுவனங்கள் எல்லாம் ஏறக்குறைய நம்முடையவை. இந்தச் செய்தி நிறுவனங்களை மையமாக வைத்தே செய்திகள் வந்து சேர்கின்றன.
எதிர்காலத்தில் இவை அனைத்தும் நமக்குச் சொந்தமாகும். அப்போது, எதை அவர்களுக்குச் செய்தி எனக் கூறி எழுதி அனுப்புகிறோமோ அதற்கு மட்டுமே முக்கியத்துவமளித்து கோயிம் ஊடகம் செய்தி வெளியிடும்.
தற்போதே கோயிம் சமுதாயத்தவரின் சிந்தனையை நாம் ஆக்கிரமித்தவராக இருக்கின்றோம். எந்த அளவுக்கு என்றால், நாம் அவர்களின் மூக்குகளில் மேல் மாட்டிவிட்டுள்ள கலர்க்கண்ணாடிகளைக் கொண்டே உலக நடப்புக்களைப் பார்த்துவருகிறார்கள்.
அரசு இரகசியங்கள் என்று அவர்களால் முட்டாள்தனமாக நம்பப்படுகின்ற உலக நாடுகளின் இராணுவ, அமைச்சக இரகசியங்களைப் படிப்பதற்குத் தற்போதே நமக்குத் தடையில்லை என்றால், எதிர்காலத்தில் நம்மில் ஒருவர் அரசராகவும், அவரின் கீழ் மற்ற யூதர்கள் உலகின் ராஜாதி ராஜாக்களாகவும் ஆகும் போதும் நம் நிலை என்னவாக இருக்கும் என்பதைச் சற்றுச் சிந்தித்துப்பாருங்கள்.
சரி, மறுபடியும் ஊடகத்தின் எதிர்காலம் பற்றிய தலைப்பிற்குள் செல்லலாம். யாருக்கெல்லாம் பதிப்பாளராகவோ. நூலகராவோ, அச்சகராகவோ ஆக வேண்டும் என்று ஆசை இருக்கிறதோ, அதற்கு முதல் நிபந்தனை அந்தத் துறையில் அவர்கள் அதற்கான பட்டயச் சான்றிதழ் பெறுவது கட்டாயமாக்கப்படும்.
எனவே நமக்கு எதிராக ஏதேனும் தவறுகள் செய்யும் பொழுது, உடனடியாக அவர்களின் சான்றிதழ் இரத்துச் செய்யப்படும்.
இங்ஙனம், மனித சிந்தனையைக் கட்டமைக்கின்ற அனைத்து விஷயங்களும் நம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படும். கட்டுப்பாட்டில் உள்ள அந்தச் சாதனங்களை, மக்களுக்குக் கல்வியூட்டுவதற்காக நாம் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இதனால் மக்கள் கூட்டம் தனித்தனியே பிரிந்து, வெவ்வேறு பாதைகளில் வழிமாறிச் செல்வது தடுக்கப்படும். வளர்ச்சி போன்ற மாயாவாதக் கொள்கைகளின் வழிகேடுகளிலிருந்து அவர்கள் தடுக்கப்படுவார்கள்.
இந்தப் போலி லிபரலிச வளர்ச்சிக் கோட்பாடுகள், மனிதர்களைக் கற்பனை உலகிற்கு அழைத்துச் செல்லும் மூடக்கொள்கை என்பதை நம்மில் யார்தான் அறியமாட்டார்கள்?
அவை தான்தோன்றித்தனமான வாழ்க்கை வாழும் மக்கள் நிரம்பிய ஒரு சமுதாயத்தைத் தோற்றுவிக்கும். அந்த மக்கள் ஆட்சியாளர்களுக்குக் கட்டுப்பட மாட்டார்கள்.
ஏனெனின் வளர்ச்சி என்ற இந்தக் கருத்து இருக்கிறதே, அது மக்களின் மனதில் எவ்வாறான சிந்தனையை ஊட்டுகிறது என்றால், அவர்கள் நினைக்கிறார்கள் எல்லாவகையான அடிமைத்தனத்திலிருந்தும் அடியோடு விடுபடுவதுதான் வளர்ச்சி என்று.
ஆனால், தன் வரம்புகள் என்னென்ன என்பதை அந்தக் கொள்கை வரையறுக்கத் தவறிவிட்டது.
ஆகையால், லிபரலிசவாதிகள் அனைவரும் ஒருவகையில், தான் தோன்றி இச்சை உடையவர்கள்தாம். அரசுக்கு எதிரானவர்கள்தாம். வெளிப்பார்வைக்கு அவ்வாறு இல்லாவிட்டாலும், அவர்களுடைய சிந்தனையின் அடிப்படை எல்லாம் அதுவாகத்தான் இருக்கிறது.
‘சுதந்திரம்’ எனும் பேயை வேட்டையாடுவதற்காக அதன் பின்னால் விரட்டிச் செல்லும் அவர்கள் அனைவரும் அரசுக்கு எதிராகச் செயல்படும் கலகக்காரர்கள் என்ற முகவரியில் அணிதிரள்கிறார்கள்.
ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும் என்பதற்காகவே. ஆர்ப்பாட்டக்காரக் கோஷ்டிகளோடு லிபரலிச வாதிகள் இணைந்து கொள்கிறார்கள்.
பத்திரிகைச் சுதந்திரத்தை இல்லாதொழிப்போம்.
இப்போது நாம் பருவ இதழ்களுக்கு வருவோம். அச்சில் வரும் எல்லா விஷயங்களுடனும் நாம் எப்படி நடந்துகொள்வோமோ அதே போல், பருவ இதழ்களின் ஒவ்வொரு பக்கத்திற்கும் முத்திரைத்தாள் வரியும், முன்தொகையும் வசூலிக்க வேண்டும்.
30 பக்கங்கள் குறைவாக உள்ள பத்திரிகைகளுக்கு இரட்டிப்பு வரி விதிக்க வேண்டும். மேலும், பருவ இதழ்களைத் ‘துண்டுப்பிரசுரம்’ என்ற வகையின் கீழ் சேர்த்துவிட வேண்டும்.
ஏனெனின், அச்சு விஷயங்களிலே அதிக நாசத்தை விளைவிக்கக்கூடிய அபாயம் உடையது, இந்தப் பருவ இதழ்கள்தாம்.
எனவே பருவ இதழ்களின் எண்ணிக்கையை முடிந்தவரை குறைப்பதற்காக நாம் நடவடிக்கை எடுத்தாக வேண்டும். இரண்டாவதாக, 30க்கும் அதிகமான பக்கங்களைக் கொண்ட பருவ இதழ்களைத் தயாரிக்க வேண்டும் என்பதற்காக, நீண்ட கட்டுரைகள் எழுதும்படி அதன் எழுத்தாளர்கள் நிர்ப்பந்திக்கப்படுவார்கள்.
ஆனால், நீண்ட கட்டுரையைப் படிக்கும் மக்கள் குறைவு. மேலும், பருவ இதழ்கள் நாளிதழ்களை விட அதிக விலையுடையது என்பதால், சாதாரண மக்கள் அவற்றை வாங்கிப் படிக்கவும் மாட்டார்கள்.
அதே சமயம் நாமும் பருவ இதழ்களைத் தயார் செய்து விநியோகிக்க வேண்டும். நம் திட்டத்திற்கு ஏற்றவாறு மக்களின் மனநிலையை, சிந்தனையை மாற்றியமைக்க, பருவ இதழ்களை மிகவும் குறைந்த விலையிலேயே விற்பனை செய்ய வேண்டும். இதனால் பரவலாக மக்கள் அதனை வாங்கிப்படிப்பர்.
மேலும் வரி நடவடிக்கைகள் மூலம் தேவையற்ற, விரும்பத்தகாத மூடத்தனமான எழுத்துக்கள் எல்லாம் ஓர் எல்லைக்குள் கட்டுப்படுத்தப்படும்.
அத்துடன், அபராத நடவடிக்கைகளுக்குப் பயந்து எழுத்தாளர்களும் நம்மைச் சார்ந்தே இருப்பார்கள். நமக்கு எதிராக யாரேனும் எழுத விரும்பினால், அதை அச்சடித்து வெளியிட அந்த எழுத்தாளர்களுக்கு யாரும் கிடைக்கமாட்டார்கள்.
அப்படியே கிடைத்தாலும், நம் அனுமதியை எதிர்பார்த்து அச்சகத்தார் நிற்க வேண்டும். இவ்வாறாக, நமக்கு எதிரான வேலைகள் அனைத்தையும் முற்கூட்டியே அறிந்து, அதற்குரிய காரியத்தோடு அவற்றைத் துடைத்தெறிந்து விடலாம்.
இலக்கியமும் இதழியலும் கல்வியூட்டும் பணியைச் செய்யும் இரு முக்கிய சக்திகள். இதனால் நம் அரசாங்கம் அதிக எண்ணிக்கையிலான பத்திரிகைகளுக்கு உரிமையாளராக விளங்கும்.
இதன் வழியாக, நம் அரசுக்கு கேட்டை ஏற்படுத்தும் தனியார் ஊடகங்களின் தாக்கம் சரிக்கட்டப்படும். மக்கள் சிந்தனையில் அளப்பெரிய மாற்றம் ஏற்படுத்தக் கூடியவராக நாம் விளங்கலாம்.
10 பருவ இதழ்களுக்கு அனுமதியளித்தால், 30 பருவ இதழ்களை நாம் நடத்துவோம். எனினும் இந்த நடவடிக்கைகள் மக்களுக்கு ஐயத்தை ஏற்படுத்திவிடக் கூடாது.
அதன் பொருட்டு, நாம் நடத்தும் இதழ்களில் பெரும்பாலானவை கருத்திலும், தோற்றத்திலும், நடவடிக்கையிலும் நமக்கு எதிராகவே இருப்பதுபோன்ற விம்பத்தை ஏற்படுத்த வேண்டும்.
இதன் மூலம் நம்முடைய பத்திரிகைகள் மேல் நம்பகத்தன்மை உருவாக்கப்படும். அதன் தொடர்ச்சியாக, நம் கண்களுக்குப் புலப்படாத எதிரிகள்கூட அந்தப் பத்திரிகைகளின் பால் ஈர்க்கப்பட்டு அதை நோக்கி வருவார்கள். நமது வலையில் சிக்கிக்கொள்ளும் அவர்கள், எல்லா வகையிலும் நமக்குப் பாதகமற்றவர்களாக மாறிவிடுவார்கள்.
அரசாங்க சார்புடையப் பத்திரிகைகளைப் பொறுத்தவரை, அவை முன் வரிசையில் நிற்கும் முன்னணிப் படையாகும். அவை எப்போதும் நமது விருப்பத்திற்கு பாதுகாவலாகச் செயற்படும். ஐயமில்லாமல், மக்களிடம் அவை ஏற்படுத்தக்கூடிய தாக்கம் அளப்பெரியதாக இருக்கும்.
இரண்டாவது தரத்தில் நடுநிலைப் பத்திரிகைகள் செயல்படும். இவை பெரிதுபடுத்தத் தகாத, உப்புச் சப்பில்லாத சின்ன சின்ன விவகாரங்களை மட்டும் தாக்கி எழுதும்.
மூன்றாவது படிநிலையில் முழுக்க முழுக்க நமக்கு எதிரான பத்திரிகைகள். அவற்றின் மத்தியில் நம்மால் உருவாக்கப்பட்ட பத்திரிகைகளுக்கும் இடமுண்டு.
அதன் கொள்கை நிலையிலும், தோற்றத்திலும் முழுக்க முழுக்க நமக்கு எதிரானது போன்று காட்சியளிக்கும். நமது எதிரிகள் அந்தப் பத்திரிகையை மனப்பூர்வமாக ஏற்று, தங்களுடைய துருப்புச்சீட்டுக்களை (திட்டங்களை) இந்தப் பத்திரிகையிடம் வெளிப்படுத்துவார்கள்.
நம்முடைய பத்திரிகை ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் செயல்படும்.
மேட்டுக்குடி சிந்தனைச் சார்புப் பத்திரிகை, ஜனநாயகச் சிந்தனையுடைய பத்திரிகை, புரட்சிகரச் சிந்தனையுடைய பத்திரிகை, அரசாங்கமே வேண்டாம்- தான்தோன்றியாகத் திரியலாம் என்ற கோஷ்டியினரின் பத்திரிகை என இன்னும் என்னென்னவெல்லாம் அரசியல் சாசனத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனவோ, அந்தச் சாயல்களில் எல்லாம் நம் பத்திரிகை செயல்படும்.
இந்தக் கடவுள் விஷ்ணுவைப் போன்று, அவை ஆயிரம் கரங்கள் உடையனவாக இருக்கும். மக்களின் நாடித்துடிப்பின் மீது அவற்றின் விரல்கள் ஒவ்வொன்றும் இருக்கும்.
மக்களுக்கு எப்போதெல்லாம் நாடித்துடிப்பு அதிகமாகிறதோ, அப்போது அந்தக் கைகள் மக்களை நம் பக்கம் அழைத்துவரும். தேவைப்படும் போது நாடித்துடிப்பை அதிகமாக்கி, மக்களைக் கருத்துகளில் பக்கம் ஈர்க்க அந்தக் கரங்கள் வேலைசெய்யும்.
பதற்றமடiயும் நோயாளி நிதானத்துடன் முடிவெடுக்கும் சக்தியை இழந்துவிடுகிறான். அதேபோன்றே பீதியடைந்த மனோநிலையில் உள்ள மக்களும், நம் ஆலோசனைகளுக்கு எளிதான இணங்கிவிடுகிறார்கள்.
தங்களுக்கு நெருக்கமான செய்தித் தாள்களில் என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ, அதுவே தங்கள் கருத்துக்கள் என்று அவர்கள் நம்பிக்கொண்டிருப்பார்கள்.
உண்மையில், அந்த மூடர்கள் நமக்குச் சாதகமான கருத்துக்களையே மறுபடியும் மறுபடியும் கூறிக்கொண்டிருக்கிறார்கள். தற்பெருமையோடு வீண் அபிமானம் கொண்டிருக்கும் அவர்கள், தம் சொந்தக் கொடியின் கீழ் நிற்பதாக நினைத்துக் கொள்கிறார்கள். அவ்வாறில்லை அவர்களுக்காக நாம் பறக்கவிட்ட கொடியின் கீழ் நின்றுகொண்டிருக்கிறார்கள்.
நம்முடைய நோக்கங்கள் நிறைவேறும் பொருட்டு, ஊடகங்கள் என்னும் படையை வழிநடத்த மிகுந்த அக்கறையும், நுணுக்கமான சிரத்தையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
நாம் தலைமைப் பத்திரிகை அலுவலகம் ஒன்றை நிறுவி, அதில் இலக்கியச் சந்திப்புக்கள் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். சந்திப்பின் போது, மற்ற பத்திரிகை ஆசிரியர்கள் அறியா வண்ணம், அவர்களிடையே ஊடுருவியிருக்கும் நமது ஏஜென்டுகள், அன்றைய நாளில் என்னென்ன விவகாரங்கள் முதன்மைப்படுத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்டவற்றை மறைமுக சங்கேத மொழியால் உணர்த்துவார்கள்.
ஆலோசனை மற்றும் விவாதங்களின் போது, போலி தர்க்கவாத முறைகளைக் கையாண்டு நம் அரசாங்கத்திற்கு ஆதரவாக ஏஜென்டுகள் பேசுவார்கள். எதிராளிகளிடம் நயவஞ்சமாக விவாதித்து, நமக்கு ஆதரவு திரட்டுவார்கள்.
அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடுவதோடு நின்றுவிடாமல், பத்திரிகைகளோடு மேலதிகத் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளவும் நம் அரசாங்கத்தின் மீது நல்லெண்ணத்தை ஏற்படுத்தவும் இதுபோன்ற வழிமுறைகள் நமக்குப் பேருதவியாக இருக்கும்.
வழக்கம் போல், நமக்கு நன்மை பயப்பதாக இருந்தால் மட்டுமே இந்த வழிமுறை கையாளப்படும் என்பதை உங்களுக்குச் சொல்லிக்கொள்கிறேன்.
நாமே, போலியான ஏற்பாடு செய்துகொண்ட பத்திரிகைத் தாக்குதல்களால் நமக்கு மற்றொரு நன்மையும் இருக்கிறது. பேச்சு சுதந்திரமும் கருத்துச் சுதந்திரமும் முழு அளவில் நடைமுறையில் இருப்பதாக மக்களை நம்ப வைக்க முடியும்.
இதன் மூலம், நமது உண்மையான எதிரிகள் வெறும் உளறல்வாதிகள் என்று மக்களிடம் நிரூபிக்க நமது ஏஜென்டுகளுக்கு ஒரு வாய்ப்புக் கிடைக்கும். நம் செயல்பாடுகளை எதிர்க்க, எதிரிகளுக்குச் சரியான அடித்தளம் இல்லாமல் ஆகிவிடும்.
பொய்களே செய்திகளாய்.
இதுபோன்ற வழிமுறைகள், தர்க்கவியல் ரீதியாகத் துல்லியமாகக் கணிக்கப்பட்ட ஒன்றாகும். இத்தகைய சிறப்புத் திட்டங்கள் மூலம், மக்களை அவர்கள் அறியாமலேயே அரசாங்கத்தின் பக்கம் வென்றெடுக்கலாம்.
மக்களின் கண்களுக்கு இந்தத் திரைமறைவு நடவடிக்கை புலப்படாது. நிச்சயம், இந்த வழிமுறைகளுக்கு நாம் நன்றிசொல்லக் கட்டுப்பட்டுள்ளோம்.
தேவைக்கேற்ப, நமக்குச் சாதகமான அரசியல் பிரச்சினைகளைத் தூண்டிவிடவோ அமைதிப்படுத்தவோ மேற்சொன்ன இவை உதவியாக இருக்கும்.
களநிலமைக்கு தக்கவாறு, உண்மைச் செய்திகளையோ பொய்ச் செய்திகளையோ அல்லது இரண்டையும் கலந்தோ, முரண்படுத்தியோ கொடுத்துப் பொதுமக்களை நம் பக்கம் ஈர்க்கவும், குழப்பவும் நம்மால் முடியும். மக்கள் மனநிலைக்கு ஏற்றவாறான உத்திகள் நம்மால் கையாளப்படும்.
இவ்வாறாகச் செய்யும் போது, உதிரிகள் விஷயத்தில் நமக்கு வெற்றி உறுதியாகிவிடுகிறது. தமது எந்தக் கருத்தையும் முழுமையாக வெளிப்படுத்த முடியாத கையறு நிலையில், எதிரிகள் இருப்பார்கள்.
ஏனெனின் அதற்குத் தேவையான ஊடகம் அவர்களிடம் இருக்காது. அதற்குக் காரணம், மேற்சொன்ன திட்டங்களைப் பயன்படுத்தி ஊடகங்களை நம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறோம். அவர்களுடைய எந்தக் குற்றச்சாட்டுகளுக்கும் மேல்பூச்சாக அன்றி, முழுமையான மறுப்புரையை நாம் எழுதத் தேவையில்லை.
அதைத் தாண்டி பதில் தரவேண்டிய நிலை ஏற்பட்டாலும், நமது மூன்றாம் தரப் பத்திரிகைகள் வாயிலாக அந்தக் குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டு, உடனடியாக முதல் மற்றும் இரண்டாம் தர ஊடகங்களில் மிக மிகச் சிறப்பான முறையில் அவை மறுக்கப்படும்.
சமகாலத்திலேயே, பிரெஞ் பத்திரிகைத் துறையில், பத்திரிகையாளர்கள் ஒன்றுபட்டு சங்கமாகச் செயல்படும் முறையுள்ளது. அங்கு பத்திரிகையாளர்கள் அனைவரும் தொழில் இரகசியம் என்ற விடையத்தால் கட்டுப்பட்டு உள்ளனர்.
ஏதேனும் அதீத இரகசியங்கள் ஒரு பத்திரிகையாளன் கையில் கிடைத்தாலும், பழங்காலத்து உரோம் பூசாரிகள் போன்று, அதை வெளியிடலாம் என்று அனைத்துப் பத்திரிகையாளர்களும் தீர்மானம் செய்தாலன்றி அவை அம்பலப்படுத்தப்படுவதில்லை.
அதையும் மீறி அந்தப் பத்திரகையாளர்களுக்கு அதை வெளியிடும் துணிச்சல் வந்தால், அந்தப் பத்திரிகையாளனின் விரும்பத்தகாத இரகசியங்கள் அம்பலப்படுத்தப்படும்.
ஏனெனின் ஊடகங்ளில் பணியாற்றும் பத்திரிகையாளர்களின் பின்புலம் கறைபடிந்ததாக இருக்கும் பட்சத்தில்தான் அவர்கள் பணியாற்ற அனுமதிக்கப்படுகிறார்கள்.
அந்த எழுத்தாளர்களின் அசிங்கங்கள் சிலருக்கு மட்டுமே தெரிந்ததாக இருக்கும் வரையில், அவனுக்கு மக்கள் மதிப்பளிப்பார்கள் அவனும் உத்தமன் போல் மற்றவர்களைத்தாக்கி எழுதலாம்.
நமது திட்டங்களுக்கு உகந்த திட்டங்களை நாட்டின் தலைநகரங்களைவிட, அது அல்லாத பிற பகுதிகளில் வாழும் மக்களிடையேதான் அதிகம் பரப்புரை செய்யவேண்டும்.
நாம் எந்த நடவடிக்கை மேற்கொள்வதாக இருந்தாலும், அது பெரும்பான்மை மக்களின் எண்ணத்திற்கு ஏற்பவே செய்யப்படுகிறது என்று காட்டவேண்டும். உண்மையில் அந்தக் கருத்துக்களுக்கு மூலாகாரணமாக நமது ஏஜென்டுகளே இருப்பார்கள்.
நாம் ஆட்சிக்கு வரும்வரை, நாட்டில் எது நடப்பதாக இருந்தாலும் அது பெரும்பான்மை மக்களின் கருத்தின் விருப்பத்திற்கு ஏற்பவே செய்ய வேண்டும்.
இல்லை, அப்படி நடப்பதாகப் படம் காட்டவேண்டும். நிறைவேற்றி முடிக்கப்பட்ட ஒரு காரியத்தைக் குறித்து, தலைநகரங்கள் ஒருபோதும் விவாதிக்கக் கூடாது.
காரணம், அந்த விஷயம் ஏற்கனவே நாட்டின் மற்ற பகுதிகளில் வாழும் பெரும்பான்மை மக்களால் அங்கீகரிக்கப்பட்டு விட்டது என்பதாகும். இதுவே தலைநகர் வாழ் மக்களிடையே நாம் எதிர்பார்க்கும் மனநிலை.
நாம் புதிய அரசாங்கத்தை நோக்கி நகரும் போது, முழு இறையாண்மையோடு விளங்கும் போது, சமுதாயத்தில் எந்த விதமான குற்றமும் நடப்பதாகப் பத்திரிகைகளில் எழுதக்கூடாது.
புதிய ஆட்சியில் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட்டு, குற்றங்கள் ஒழிக்கப்பட்டு விட்டதாக மக்கள் நம்புவது மிக முக்கியமான ஒன்று..! ஏதாவது குற்றச் சம்பவங்கள் இடம்பெறுமானால், அது பாதிக்கப்பட்டவர்களுக்கும், சிலசமயம் அதன் சாட்சிகளுக்கும் மட்டுமே தெரிந்ததாக இருக்கவேண்டும். கண்டிப்பாக இவர்களுக்கு மாத்திரம் தானே தவிர, வேறு யாரக்கும் கிடையாது..!