அமெரிக்காவின் வனவிலங்கு பூங்காவில் பிறந்த பிஞ்சு குழந்தையை அன்போடு தூக்கி முத்தமிடும் தாய் கொரில்லா பற்றிய காணொளி.
ஆபத்தை அறியாமல் கைகளால் இறால் பிடிக்கும் பெண்கள் (காணொளி)
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடற்கரை கிராமப் பெண்கள் ஆபத்தை அறியாமல் கழுத்து அளவு தண்ணீரில் இறங்கி உணவுக்காக கைகளால் இறால் மீன்களை பிடிக்கின்றனர்.
பொதுவாக ஒரு நபர் அதிகபட்சமாக 2 முதல் 3 கிலோ வரை பிடித்து விடுவதாகவும், இப்படி பிடிக்கப்படும் இறால் அதிக சுவையுடன் இருக்கும் எனவும் அப்பகுதி கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த வகை மீன் பிடிப்பில் ஈடுபடுவோர் கடலோர கிராமங்களில் வசிக்க கூடியவர்களே. இவர்களில் பெரும்பாலானவர்கள் மீனவர்கள் மற்றும் விவசாயிகள்.