அம்பலாங்கொடை – ஊறவத்த பகுதியில் இன்று(18) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பொலிஸ் சார்ஜன்ட் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது திடீரென வீதிக்கு குறுக்காக பூனையொன்று பாய்ந்துள்ளது.
இதன்போது வேகத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில் மோட்டார் சைக்கிள் அருகிலிருந்த மதிலில் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.