திருகோணமலை – அக்போபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 85 ஆம் கட்டை பகுதியில் கோடரியால் தாக்கி பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (29) இரவு இடம்பெற்றுள்ளது.
அயல் வீட்டில் வசித்துவந்த ஒருவருடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறி கொலையில் முடிந்துள்ளது.
அயல் வீட்டில் வசித்த 54 வயதான நபர் மதுபோதையில் குறித்த பெண்ணின் கணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், அவரை கோடரியால் தாக்க முயன்ற போது மனைவி தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
44 வயதான பெண் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சடலம் கந்தளாய் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கந்தளாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.