உடப்பு முல்லைத்தீவுக் கிடையில் சேவையிலீடுபடும் தனியார் பஸ்ஸில் பயணம் செய்த யுவதியொருவரின் ஆயிரம் ரூபா பணம் வெளியில் விழுந்துவிடவே அதனை எடுப்பதற்காக இறங்கிய அந்த யுவதியை நடுக்காட்டில் தனியாக விட்டு விட்டு சாரதி பஸ்ஸை எடுத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ள. இது தொடர்பில் அந்த பஸ்ஸில் பயணித்தவர்கள் கூறுகையில்;
கடந்த புதன்கிழமை காலை 6.20 மணிக்கு புறப்பட்ட வவுனியா யாழ்ப்பாண தனியார் போக்குவரத்து பயணிகள் பஸ்ஸில் வவுனியாவிலிருந்து பயணித்த ஒரு யுவதி பயணச்சீட்டைப் பெற 2000 ரூபாவைக் கொடுத்தவேளை அதன் மிகுதிப்பணத்தை நீண்ட தூரம் பிரயாணித்தபின் அதாவது மாங்குளம் கொக்காவிலுக்கு இடைப்பட்ட பகுதியில் நடத்துனர் வழங்கிபோது மிகுதிப்பணத்தில் 1000 ரூபா காற்றில் பறந்து வெளியே சென்றது.
எனவே பஸ்øஸ் நிறுத்தி தேடியும் பணம் கிடைக்கவில்லை. இந்த நிலையில் பஸ்ஸின் சாரதி ஏனையோரை பஸ்ஸில் ஏறும்படிகூறி அப்பெண்ணடம் எதுவும் கூறாமல் அவ்விடத்திலேயே விட்டு விட்டு பஸ்ஸைச் செலுத்தி சென்றர். இதுதொடர்பாக எவருமும் எதிர்ப்பைத்தெரிவிக்கவில்லை.
பொதுவாக தனியார் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துநர்களின் அநாகரீக வார்த்தைப் பிரயோகங்களே இதற்குக்காரணம். ஒரு யுவதியை பயணத்தின் இடைநடுவில் அதாவது காட்டுப்பகுதியில் விட்டுச்சென்றமை கண்டிக்கத்தக்கது.
சிலவேளைகளில் தனது உடைமைகளைக்கூட அவர் பஸ்ஸில் வைத்திருக்கக்கூடும். இதுபோன்ற பொறுப்பற்றமுறையில் அநாகரீகமாக பொதுச்சேவையில் ஈடுபடும் சரதிகள், நடத்துனர்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
மேற்குறித்த சம்பவத்துடன் ஈடுபட்ட பஸ்ஸின் பெயர்ப்பலகை உடப்பு முல்லைத்தீவு எனக்குறிப்பிடப்பட்டிருந்தது. பொதுவாக இவர்களின் பண்பாடற்ற அநாகரீக வார்த்தைப்பிரயோகத்தால் பயணிகள் பிரயாணத்தின்போது மிகவும் அöச்கரியங்களை எதிர்கொள்ளநேரிடுகின்றது.
அதுமட்டுமல்லாது அநேகமான தனியார் பஸ் சாரதிகள் பயணத்தின் தொடக்கத்தில் மெதுவாக பஸ்ஸை செலுத்தி பின்னால் வேறு பஸ்ஸைக்கண்டதும் அபாயகரமான முறையில் பஸ்ஸை செலுத்தி செல்கின்றனர்.
ஒரு சில பஸ்களில் நடத்துநர் தவிர்ந்த மேலதிகமாக சிலர் காணப்படுவதுடன் அவர்கள கூட நடத்துனர்கள் போல் நடந்துகொள்வதும் பயணிகளிடையே பெரும் சினத்தை ஏற்படுத்துகின்றது.
இதை தடுப்பதற்கு நடத்துனர்களுக்கு சீருடை அல்லது நடத்துநர் என்பற்கான ஆள் அடையாள அட்டையை காட்சிப்படுத்தக்கூடியவாறு பணிக்கப்பட வேண்டும் இதனூடாக பயணிகளின் பிரயாணத்தை சிரமின்றி மேற்கொள்ள ஆவன செய்ய முடியும் என்றனர்.