வீடொன்றிலிருந்து கொலை செய்யப்பட்ட நிலையில் கணவன் மற்றும் மனைவி ஆகியோரிக் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தம்புள்ளை , கலேவெல, தேவஹூவ பிரதேசத்திலுள்ள வீடொன்றிலிருந்தே கணவனும் மனைவியும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இவ்வாறு கொலைசெய்யப்பட்டவர்கள் 53 மற்றும் 52 வயதுடையவர்கள் என தெரிவிக்கும் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.