அஜித் நடிக்கப்போகும் அடுத்த படத்தில் கமலின் இளைய மகள் நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்..
அஜித் அடுத்ததாக ‘சிறுத்தை’ சிவா இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கான பூஜை சமீபத்தில் சென்னையில் எளிமையாக நடைபெற்றது.
இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது.
இப்படத்தின் பூஜை முடிவடைந்துள்ள நிலையில் படப்பிடிப்பை விரைவில் தொடங்கவுள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் கதாநாயகிக்காக காஜல் அகர்வாலிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், கமலின் இளையமகளான அக்ஷரா ஹாசன் ‘தல57’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது.
அக்ஷரா ஹாசன் ஏற்கெனவே இந்தியில் பால்கி இயக்கத்தில் தனுஷ்-அமிதாப் இணைந்து நடித்து வெளிவந்த ‘ஷமிதாப்’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். தற்போது, கமல் நடித்து வரும் ‘சபாஷ் நாயுடு’ படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார்.
அஜித் படத்தில் அக்ஷராவுக்கு ஹீரோயின் வேடம் இல்லையாம். இருப்பினும், வேதாளம் படத்தில் லட்சுமிமேனன் நடித்த கதாபாத்திரத்திற்கு இணையாக இந்த படத்தில் அக்ஷராவின் கதாபாத்திரம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இப்படம் முழுக்க முழுக்க வெளிநாடுகளில் படமாக்கப்பட உள்ளது. செப்டம்பர் மாதம் ‘தல57’ படப்பிடிப்பில் அக்ஷராஹாசன் கலந்துகொள்வார் என்று கூறப்படுகிறது.
அஜித்துக்கு வில்லனாகிறாரா பிரசன்னா?
பிரசன்னா தற்போது ‘தல57’ படத்துக்கு வில்லனாக நடிக்கப்போவதாக செய்தி ஒன்று கோலிவுட்டில் பரவுகிறது. அது உண்மையா? என்பதை கீழே பார்ப்போம்…
தமிழ் சினிமாவுக்கு சாக்லேட் பாயாக அறிமுகமான பிரசன்னா, மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த ‘அஞ்சாதே’ படத்தின் மூலம் வில்லனாக மாறினார்.
இப்படத்தை தொடர்ந்து ஒருசில படங்களில் வில்லனாக நடித்த பிரசன்னா தற்போது அஜித் நடிக்கவிருக்கும் ‘தல57’ படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்காக சமீபத்தில் பிரச்சன்னாவிடம் இதுகுறித்து படக்குழுவினர் பேசியதாக கூறப்படுகிறது. பிரசன்னா தற்போது தனது உடல் எடையை அதிகரித்து வருகிறார்.
அனேகமாக, ‘தல57’ படத்துக்காகக்கூட அவர் இந்த முயற்சியை மேற்கொண்டு வரலாம் என்று கூறப்படுகிறது. மேலும், இப்படத்தில் மற்றொரு வில்லனாக அரவிந்த் சாமியும் நடிக்கவுள்ளதாக ஒரு செய்தி கோலிவுட் வட்டாரத்தில் உலாவுகிறது.
எதுவாக இருந்தாலும், முடிவில் படக்குழுவினர் இப்படத்தின் வில்லன் யார் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள்.
இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க காஜல் அகர்வாலிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். சிறுத்தை சிவா இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவிருக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
முழுக்க முழுக்க வெளிநாடுகளில் இப்படம் படமாகவிருக்கிறது.
பல்கேரியாவில் முதல்கட்ட படப்பிடிப்பை நடத்தவுள்ளனர். அதைத்தொடர்ந்து மொத்தம் 4 நாடுகளில் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்தவுள்ளனர்.