மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எருவில் கோடமேட்டினை சேர்ந்த மகாலிங்கம் டினேஸ்குகன் (19 வயது) இன்று அதிகாலை விபத்தில் பலியாகியுள்ளார்.
சிறியரக கன்டர் வாகனத்தில் தாந்தமலை ஆலயத்திற்கு சென்றுவரும் போது மாங்காட்டில் மின்சாரக்கம்பத்துடன் மோதியதிலே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இதனை கேள்வியுற்ற இளைஞனின் அப்பம்மா அதிர்ச்சியில் மரணித்துள்ளதாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் கு.சுகுணன் தெரிவித்தார்.
இரு சடலங்களும் பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்தில் 19 வயது இளைஞர் பலி
மட்டக்களப்பு கல்முனை வீதியில் மாங்காடு பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை மீறி தொலைத்தொடர்பு கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியதில் மோட்டார் சைக்கிளை செலுத்திவந்த 19 வயது இளைஞர் உயிரிழந்ததுள்ளார்.
இந்த விபத்தில் மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து சம்பவம் இன்று வியாழக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
களுவாஞ்சிக்குடி எருவில் கோடைமடு பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய மகாலிங்கம் லஷ்சன் என்பவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்
மட்டக்களப்பு தான்தோன்றிஸ்வரர் ஆலயத்தில் இடம்பெற்றுவரும் வருடாந்த உற்சவத்தையிட்டு, நான்கு நண்;பர்கள் இரு மோட்டார் சைக்கிளில் நேற்று புதன்கிழமை இரவு சென்றுள்ளனர்.
ஆலய வழிபாட்டை முடித்துவிட்டு இன்று வியாழக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் வீடு திரும்பிய போது, மாங்காடு பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை மீறி வீதியை விட்டு விலகி தொலைத்தொடர்பு கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியது.
மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த 19 வயது இளைஞர் சம்பவ இடத்தில் உயிரிழந்ததுடன், பின்னால் இருந்து வந்த இளைஞர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இதுதொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.