ஈராக் மற்றும் சிரியாவில் தீவிரவாத செயல்களை செய்துகொண்டிருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு இளைஞர்கள் மற்றும் பெண்களை தங்கள் இயக்கத்திற்கு மூளைச்சலவை செய்து இணைத்து வருகின்றனர்.
அவர்களுக்கு கடுமையான பயிற்சி கொடுத்து அவர்களையும் தீவிரவாத செயல்களில் ஈடுபட வைக்கின்றனர். இந்நிலையில் தீவிரவாதிகள் குழந்தைகளையும் விட்டுவைக்கவில்லை என்ற திடுக்கிடும் தகவல் ஒன்று தற்போது தெரிய வந்துள்ளது.
நேற்று ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் தங்கள் இணையதளங்களில் வெளியிட்ட புகைப்படங்களில் சிரியாவின் ராணுவ வீரர் ஒருவரின் தலையை ஒரு வயது குழந்தை காலில் கால்பந்தை எட்டி உதைப்பது போல உதைக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தை அந்த குழந்தையின் தந்தை பார்த்து பெருமையாக சிரிப்பது போன்றும் அந்த புகைப்படத்தில் உள்ளது.
இந்த புகைப்படங்கள் உலகம் முழுவதையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பெண்கள், இளைஞர்களுக்கு பயிற்சி கொடுத்தது போதாதென்று குழந்தைகளையும் தீவிரவாத செயல்களுக்கு ஊக்குவிப்பது கொடுமையிலும் கொடுமை என உலகம் முழுவதும் உள்ள சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ISIS Auctioning Sex Slaves Yazidis