உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பிற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், வெளிநாட்டு வாகன தொழிற்சாலைகள் தங்களது உற்பத்தியை நிறுத்தியுள்ளன.
உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷ்யா 2 வாரத்திற்கும் மேலாக போர் செய்து வருகிறது. ரஷ்யாவின் படையெடுப்பிற்கு கண்டனம் தெரிவித்துள்ள உலக நாடுகள் பலவும் அதன் மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளன.
இதன் ஒரு பகுதியாக ரஷ்யாவில் இயங்கி வரும் வெளிநாடுகளை சேர்ந்த Toyota, Volkswagen, Jaguar, Land Rover, Mercedes-Benz, Ford, BMW ஆகிய ஆட்டோமொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது வாகன உற்பத்தியையும் ஏற்றுமதியையும் நிறுத்தி வைத்துள்ளன.
இதையடுத்து, குறித்த வௌிநாட்டு நிறுவனங்கள் தமது வாகன தயாரிப்பை மீண்டும் தொடங்காவிட்டால், அவர்களது அனைத்து தொழிற்சாலைகளும் தேசியமயமாக்கப்படும் என ரஷ்யா பகிரங்கமாக மிரட்டியுள்ளது.
இதையடுத்து, Hyundai நிறுவனம் போர் காரணமாக விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால், உற்பத்தியை நிறுத்தி இருப்பதாகவும், விரைவில் மீண்டும் உற்பத்தி தொடங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
Renault நிறுவனமும் உற்பத்தியை ஆரம்பிக்கப்போவதாக தெரிவித்துள்ளது.
ஐரோப்பா மற்றும் மேற்குலக நாடுகளில் விற்பனை செய்யப்படும் பெரும்பாலான வாகனங்கள் ரஷ்யா மற்றும் உக்ரைனிலேயே உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில், ரஷ்யாவின் இந்த மிரட்டல் உலக நாடுகளை அச்சமடைய செய்துள்ளது.