கத்தி திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு போன் நம்பர் காட்சியால் பள்ளியாசிரியர் ஒருவர் நொந்து போயிருக்கிறார்
ஏ செல்பி புள்ள நல்லா
இருக்கியா? அஞ்
சான்லேர்ந்தே நான் உன்னோட
பேன், – கத்தியில கலக்கிட்டே
கண்ணு, -செல்பி புள்ள உம்மா
செல்பி புள்ள உம்மம்மா….! -இந்த
டயலாக் கத்தி படத்தில் நடித்த
ஹீரோயின் சமந்தாவுக்கு வந்தது
அல்ல, கன்னியாகுமாரியைச் சேர்ந்த
ஆசிரியர் ஒருவருக்கு வந்த போன்
கொஞ்சல்.
கத்தி படத்தில் விஜய்
சமந்தாவைப் பார்த்து ஜொள்ளு
விடுவார். சமந்தாவும் விஜய்யிடம்
வந்து உங்ககிட்டே கொஞ்சம்
தனியாபேசணும் என் பேரு அங்
கீதா. நான் ஒருத்தரை லவ்
பண்றேன்.கொஞ்ச நேரத்துக்கு முன்
னாடி அவரை கொன்னுட்டாங்க.
அங்கே பாருங்க அவருதான் என விஜயைக்
கண்ணாடியில் பார்க்க சொல்லிக்
கலாய்த்துவிட்டு என்னோட நம்பர்
9444404296 நீங்க திரும்பி வந்தா
பார்ப்போம் என்றபடி செல்வார்.
உற்சாகத்தில் திக்குமுக்காடிப்
போன விஜய் பாங்கொங் செல்ல
இருந்த பிளைட் டிக்கெட்டையே
கிழித்தெறிந்து விட்டு சமந்தாவோடு
டூயட் சோங் கனவில் மிதப்பார்.
பாடி முடித்ததும் சமந்தா கொடுத்த நம்பருக்கு
ஆவலோடு போன் செய்வார்.
எதிர்முனையில் போனை எடுக்கும் பெண்
அங்கீதாவா இல்லேங்க. இது கார்ப்பரஷேன்
நாய்கள் கருத்தடை டிபார்ட்மண்டுங்க. உங்க
ஏரியாவுல ஏதாவது நாய்தொல்லை இருக்கா?
என்று கூற விஜய்யின் முகம் வெளிறிப்போகும்.
படத்தில் இந்த சீனும் அங்கீதாவின் செல்போன்
எண்ணும் ரசிகர்களின் மனதில் பச்சக் என
ஒட்டிக் கொண்டது. இங்குதான் வினையே
ஆரம்பித்தது.
ரசிகர்களும் ரசிகைகளும் அந்த செல்போன்
எண்ணில் தொடர்பு கொண்டு கலாய்க்க
அது உண்மையில் கன்னியாகுமாரி
மாவட்டம் குழிச்சலைச் சேர்ந்த
பள்ளி ஆசிரியர் ஜெப ஜெகதிஷ்
என்பவரின் நம்பர்.
நொந்து நூடுல்
ஸான அவரை சந்தித்த போது
போட்டோ வேண்டாம் என்ற
நிபந்தனையுடன் அவர் கூறியதா
வது, தீபாவளி அன்னிக்கு
எனக்கு ஒரு போன் கோல்
வந்தது. மேடம் நீங்க ரொம்ப
ஸ்டைலா இருக்
கீங்க. உங்க பெர்பாமன்ஸ்
அருமை உங்களை நேரில் பார்க்க
முடியலைன்னாலும் போன்லயா
வது பேச முடிஞ்சுது ரொம்ப
சந்தோஷமா இருக்குது என்றது.
ஒரு ஆண் குரல். எனக்கு
ஒண்ணும் புரியலை.
தொடர்ந்து இது மாதிரியான
கோல்கள் வரவே
நண்பர் ஒருவரிடம் விஷயத்தைக் கூறினேன். அப்பு
றம்தான் தெரிந்தது எனது செல் நம்பரும்
கத்தி படத்தில் சமந்தா கொடுத்த நம்பரும் ஒரே
நம்பர்தான் என்று.
இப்ப சிங்கப்பூர், துபாய், அமெரிக்கா
என வெளிநாடுகளிலும் இருந்து போன்
கோல்கள் வருகிறது.
ரோங் நம்பர்
என்றாலும் விடுவதாக இல்லை. சிலர்
எங்க வீட்டுல ரெண்டு நாய் இருக்கு.
கருத்தடை செய்யணும் நாய்க்கு
மட்டும் தான் கருத்தடை செய்வீங்களா–?
புலி சிங்கத்துக்கு எல்லாம் செய்ய
மாட்டீங்களா? என்கின்றனர்.
ஒரு போன் நம்பரை படத்தில்
வைக்கப்போய் நிம்மதியின்றி நான்
தவிக்கிறேன். இதற்கு காரணம்
டைரக்டர்தான் என்றவரிடம் பொலிஸில்
புகார் செய்தீர்களா? என்ற போது
எதுக்கு சார் வம்பு? அடுத்த மாசம்
எனக்கு கல்யாணம் ஆகப்போகுது
இந்த நேரத்துல எதுக்கு தகராறு? என
முடித்துக்கொண்டார்..