காலி மாவட்டத்தின் அக்மீமன பிரதேசத்தில் 10 வயதுடைய சிறுமியொருவர், துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த 10 வயதுடைய சிறுமி, 80 வயதான 4 பிள்ளைகளின் தந்தை ஒருவராலேயே மேற்படி துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, தொலைக்காட்சி பார்ப்பதற்காக வயோதிபரின் வீட்டிற்கு சென்ற நிலையில், வீட்டில் யாரும் இருந்திருக்கவில்லை.
அச்சந்தர்ப்பத்தை சாதகமாக பயன்படுத்திகொண்ட குறித்த நபர், சிறுமியை சீரழித்துள்ளதாக, பாதிக்கப்பட்ட சிறுமி பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
அதற்கமைய கைது செய்யப்பட்ட முதியவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.