ஃபுளோரிடாவை சேர்ந்த சிறுவன் போலீஸாருக்கு போன் செய்து பீட்சா வாங்கி வருமாறு தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த மானுவல் என்ற சிறுவன் சான்ஃபோர்ட் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டுள்ளார்.
911 அவசர எண்ணை அழைத்த மானுவல், தனக்கு கடுமையாகப் பசிக்கிறது பீட்சா வாங்கி வாருங்கள் எனத் தெரிவித்துள்ளார்.
சிறுவன் தொலைபேசியில் அழைத்தது வீட்டில் உள்ள யாருக்கும் தெரியவில்லை. சிறுவனின் தொலைபேசி அழைப்பை வைத்து காவல்துறையினர் அவரது வீட்டுக்கு விரைந்துள்ளர்.
காவலர்கள் சென்றபோது அங்கு சிறுவனின் 15 வயதுச் சகோதரி ஒருவரும் இருந்துள்ளார். காவலர்கள் தாங்கள் வந்த விஷயம் குறித்து கூறவும் அவர் பதறிவிட்டார்.
எங்களது கவனக்குறைவால் இது நடந்துவிட்டது. மானுவல் போன் செய்தது குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது எனக் கூறியுள்ளார்.
காவல் அதிகாரிகளோ நாங்கள் பீட்சாவை கொடுக்கதான் வந்தோம் எனக் கூறி தாங்கள் வாங்கி வந்த பீட்சாவை சிறுவனுக்குக் கொடுத்தனர்.
அந்த பீட்சா மற்றும் சிறுவனுடன் சான்ஃபோர்ட் காவல்துறையினர் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இனி மேல் இவ்வாறு செய்யக் கூடாது என சிறுவனிடம் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்தப் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட சான்ஃபோர்ட் காவலர்கள், “எங்களுக்கு ஒரு சிறுவன் போன் செய்து கடுமையாகப் பசிக்கிறது; பீட்சா வேண்டும் எனக் கூறினார்.
3 காவலர்களை அனுப்பி பீட்சாவை கொடுத்தோம். அவரின் சகோதரி பதறிவிட்டார். சிறுவனுக்கு அறிவுரை கூறினோம்” என #ப்ளீஸ் டோண்ட் கால் 911 ஃபார்டெலிவரி (#PleaseDon’tcall911fordelivery) என்ற ஹேஷ்டேக்கில் பதிவு செய்துள்ளனர்.