இன்றைய தினம் (12.11.2020) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.
கொழும்பு 12 பகுதியை சேர்ந்த 54 வயதுடைய ஒருவரும், மீகொடையை சேர்ந்த 45 வயதுடைய ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.