இங்கிலாந்தில் உள்ள Middlesbrough என்ற நகரில் ஏ.டி.எம் ஒன்றில் பணம் எடுக்க வந்த 53 வயது பெண் ஒருவரிடம் நூதனமுறையில் கொள்ளையடிக்க முயன்ற இரண்டு திருடர்களை ஏ.டி.எம் மையத்தில் இருந்த கேமிராவின் உதவியால் போலீஸார் கைது செய்தனர்.
நேற்று மாலை இங்கிலாந்தில் உள்ள Middlesbrough என்ற நகரில் Santander bank என்ற வங்கியின் ஏ.டி.எம் மையத்தில் பணம் எடுக்க Wendy Cleasby என்ற 53 வயது பெண் வந்தார்.
ஏ.டி.எம். கார்டை மிஷினில் செருகிவிட்டு ரகசிய எண்ணையும் பதிவு செய்தபின்னர் திடீரென உள்ளே நுழைந்த இரண்டு மர்ம நபர்கள், அந்த பெண்ணிடம் சென்று கீழே $5 பணம் இருப்பதாக கூறினர்.
அவர்களுடைய சூழ்ச்சியை அறியாத Wendy Cleasby, கீழே இருந்த $5 டாலரை எடுக்க முயற்சித்தபோது ஏ.டி.எம். மையத்தில் அவர் எடுக்கவிருந்த பணம் மிஷினில் இருந்து வெளியே வந்தது. அந்த பணத்தை சிலநொடிகளில் கைபற்றிவிட்டு தப்பித்து சென்றுவிட்டனர்.
பின்னர்தான் தாம் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்பதை புரிந்துகொண்ட Wendy Cleasby, உடனடியாக காவல்துறையினர்களிடம் புகார் அளித்தார். காவல்துறையினர் வங்கி அதிகாரிகளின் உதவியோடு ஏ.டி.எம் மையத்தில் இருந்த கண்காணிப்பு கேமிரா உதவியால் இருவரையும் அடையாளம் கண்டு அடுத்த ஒரு மணிநேரத்தில் இரு குற்றவாளிகளையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 28 வயது Floran Constantin Serban மற்றும் 22 வயது Constantin Radu Serban ஆகிய இருவரும் சகோதரர்கள் என விசாரணையில் தெரியவந்தது. இவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.