வந்தவாசி: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த திரேசாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தனிஷ்லாஸ்(56).
ஸ்டெர்லிங்(29). தனிஷ்லாசுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 50 வயது விதவைக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளத்தொடர்பாக மாறியுள்ளது.
இதையறிந்த அவரது மனைவி பிலோமினால், கணவரிடம் கள்ளத்தொடர்பை கைவிடும்படி பலமுறை வற்புறுத்தியுள்ளாராம். இதனால் தனிஷ்லாசுக்கும், பிலோமினாலுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தனிஷ்லாஸ், தனது கள்ளக்காதலியான விதவை பெண்ணுடன் சென்றார்.
நேற்று முன்தினம் திருவிழாவிற்காக வீடு திரும்பினார். இதனால் ஆத்திரமடைந்த பிலோமினால், மகன்கள் அலெக்ஸ், ஸ்டெர்லிங் ஆகியோர் தனிஷ்லாசிடம் தட்டிக்கேட்டுள்ளனர்.
அப்போது அவர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த தனிஷ்லாஸ், தனது மனைவி பிலோமினாலை சரமாரியாக தாக்கினாராம்.
இதனால் மகன்கள் அலெக்ஸ், ஸ்டெர்லிங் இருவரும் அங்கிருந்த கட்டையால் தனிஷ்லாஸை சரமாரி தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் பலத்த காயமடைந்த தனிஷ்லாஸ் மயங்கி விழுந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால் வழிலேயே தனிஷ்லாஸ் நேற்றிரவு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த தெள்ளார் போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தனிஷ்லாஸின் தம்பி பவ்வுல் தெள்ளார் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முரளிசுந்தர் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள பிலோமினால், அலெக்ஸ், ஸ்டெர்லிங் ஆகிய 3 பேரையும் தேடி வருகின்றனர்.