லண்டனில் உள்ள இலங்கை உயரிஸ்தகராலயத்தின் முன்பாக ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அச்சுறுத்திய சம்பவத்தில், அப்போது குறித்த உயரிஸ்தானிகராலய பாதுகாப்பு அதிகாரியாக கடமையாற்றிய பிரிகேடியர் பிரியங்கர பெர்ணான்டோவை குற்றவாளியாக பிரித்தானிய நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் பிரிகேடியர் பிரியங்கர பெர்ணான்டோவை ஏற்கனவே கைது செய்ய உத்தர்வு பிறப்பித்த இவ்வழக்கை விசாரிக்கும் லண்டன் வெஸ்மினிஸ்டர் நீதிவான் நீதிமன்றம் இன்று பிரித்தனையாவின் 1986 ஆம் ஆண்டின் பொதுப் பாதுகாப்பு சட்டத்தின் இரு சரத்துக்களை மீறியுள்ளமையை உறுதி செய்து பிரிகேடியர் பிரியங்கர பெர்ணான்டோவை குற்றவாளியாக அறிவித்துள்ளது.
இதனையடுத்து நீதிமன்றம் அவருக்கு 2500 பவுண் அபராதம் விதித்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
-wrapper main-term-none next_prev “>