இயற்கையின் ரம்மியமான சூழலில் மலை உச்சியில் காதலன் தன் காதலியின் முன்பு மண்டியிட்டு தனது காதலை வெளிப்படுத்துகிறான்.
இந்தக் காட்சியை அங்கிருந்த ஒரு புகைப்படக்காரர் தன் கேமராவில் பதிவு செய்து சமூகவலைதளங்களில் பதிவிட தற்போது அந்த போட்டோகிராஃபருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
அமெரிக்காவைச் சேர்ந்த புகைப்படக்காரர் பெயர் மேத்யூவ் டிப்பில், கலிபோர்னியாவில் உள்ள தேசியப் பூங்காவுக்குச் சென்றவர் தனது கேமராக்களின் வழியே இயற்கை அழகை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது, அவருக்கு எதிரே இருந்த மலை உச்சியில் ஒரு காதல் ஜோடி தங்களது காதலை பகிர்ந்துகொள்ளும் காட்சியை தன் கேமராவின் வழியாக கண்டுள்ளார்.
அதை மிக அழகாக படம் பிடித்தும் உள்ளால், உடனடியாக அந்தக் காதல் ஜோடியைக் காண மேத்யூவ் மலை உச்சிக்கு விரைந்துள்ளார். ஆனால், அங்கு அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இதுகுறித்து ஆங்கில செய்தி நிறுவனத்துக்குப் பேட்டி அளித்துள்ள மேத்யூ, ஹஹஇயற்கைக் காட்சிகளைப் படம் பிடிப்பதற்காக நான் காத்திருந்தேன்
. எனது கேமராவும் தயார் நிலையில் இருந்தது. அப்போது ஒரு ஜோடியை Taft Point- கண்டேன். அவர்கள் தங்களது காதலை வெளிப்படுத்திக்கொண்டிருந்தனர்.
அந்த சூழலில் அது மிகவும் அற்புதமாக இருந்ததால் அந்தக்காட்சிகளை க்ளிக் செய்தேன். அதன் பின் அவர்கள் இருந்த இடத்தை நோக்கி விரைந்தேன்.
அதற்குள் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்று விட்டனர். மேலும் அங்கு ஏராளமான ஜோடிகள் இருந்ததால் என்னால் அவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
அவர்களைக் கண்டுபிடிக்க வேண்டி கடந்த 17-ம் தேதி ஃபேஸ்புக்கில் பதிவிட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.