உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகளை தற்போது பல்வேறு நாடுகள் ஆரம்பித்துள்ளன.
அந்தவகையில் சுவிட்சர்லாந்தின் லூசரன் மண்டலத்திலுள்ள முதியோர் காப்பகத்தில் இருப்பவர்களுக்கு பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இதில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஒரு முதியவர், ஊசி போட்ட சிலமணி நேரத்தில் மரணம் அடைந்தார். தடுப்பூசி போட்ட பிறகு அடிவயிற்றிலும், சிறுநீர் குழாய் பகுதியிலும் வலி இருப்பதாக கூறியுள்ளார்.
இந் நிலையில் திடீரென்று மரணம் அடைந்தார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கும் முதியவர் மரணத்துக்கும் நேரடி தொடர்பு எதுவும் இல்லை என்று சுவிட்சர்லாந்து நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
91 வயதான அந்த முதியவர் ஏற்கனவே மருத்துவ சிகிச்சை பெற்று வந்துள்ளார் அவர் இயற்கையாகவே மரணம் அடைந்து இருக்கிறார்.
கொரோனா தடுப்பு மருந்துக்கும் அவரது மரணத்துக்கும் தொடர்பு இல்லை என்று மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.