வவுனியா செட்டிகுளம் முகத்தான்குளம் பகுதியில் உள்ள பிள்ளையார் ஆலயத்தின் பூஜையின் போது பாம்பு ஒன்று தோன்றியுள்ளது.
குறித்த ஆலயத்தில் வருடாந்த கும்பாபிஷேக நிகழ்வு இன்று இடம்பெற்ற நிலையில் ஆராதனையின் போது பாம்பு ஒன்று தோன்றியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆலயத்தில் உள்ள நாகபூசனி அம்மனின் திருவுருவ சிலைக்கு ஆராதனை செய்யும் பொழுதே, திடீரென அங்கு தோன்றிய நாகபாம்பு அம்மனின் சொருபத்தில் ஏறி ஆராதனை முடியும் மட்டும் காட்சியளித்துள்ளது.
மேலும் ஆராதனை முடிந்தவுடன் அவ்விடத்தை விட்டு அகன்று சென்றுவிட்டதாகவும் அங்கு சென்ற பக்தர்கள் கூறியுள்ளனர்.
இந்தச் சம்பவத்தைப் பார்வையிடுவதற்காக பக்தர்கள் பலர் குறித்த ஆலயத்திற்கு இன்றைய தினம் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.