கடந்த 33ஆண்டுகளாக பார்வையில்லாமல் இருந்த அமெரிக்காவை சேர்ந்தவர் லார்ரி ஹெஸ்டர் என்ற 66 வயது முதியவருக்கு பயோனிக் ஐ என்ற தொழில்நுட்பத்தின் மூலம் மீண்டும் பார்வை கிடைத்துள்ளது.
30வது வயதில் கண்பார்வையை இழந்த இவர் தற்போது வெளியுலகத்தை முதன்முதலாக செயற்கை கண் மூலம் பார்த்து மகிழ்ந்து வருகிறார்.
அமெரிக்காவில் உள்ள வடக்கு கரோலினா நகரை சேர்ந்த Larry Hester என்பவர் Duke University, என்ற பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளராக இருந்தவர். இவருக்கு தனது 30 வயது வயதி திடீரென ஏற்பட்ட கண் நோய் காரணமாக பார்வையை இழந்தார்.
அதுமுதல் கடந்த முப்பது வருடங்களாக பார்வையில்லாமல் இருந்த இவருக்கு சமீபத்தில் பயோனிக் கண் என்ற செயற்கை கண் பொருத்தப்பட்டது. இந்த சர்ஜர் வெற்றிகரமாக நடைபெற்று இவர் தற்போது கண் பார்வை பெற்றுவிட்டார்.
அமெரிக்காவில் பயோனிக் கண் என்ற செயற்கை கண் மூலம் பார்வை பெற்ற ஆறாவது நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பயோனி ஐ என்ற செயற்கை கண்ணை பொருத்த கடந்த 2013ஆம் ஆண்டு அமெரிக்க அரசு அனுமதி கொடுத்தது. இந்த செயற்கை கண்ணை பால் ஹான் என்ற ஆராய்ச்சியாளர் தனது தீவிர முயற்சியால் கண்டுபிடித்தார்.
வயர்லெஸ் தொழில் நுட்பம் மூலம் கண்களில் உணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு கண் கண்ணாடிகள் வழியாக கேமரா மூலம் வெளியான வெளிச்சம் மூளைக்கு சென்று பார்வையாக வெளிப்பட்டு, இந்த பயோனிக் ஐ இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தந்தையின் முன்னாள் மனைவியை திருமணம் செய்த வளர்ப்பு மகன்..!!
14-10-2014
பிரான்ஸைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது தந்தையின் முன்னாள் மனைவியை தந்தையின் அனுமதியுடன் திருமணம் செய்துள்ளார்.
45 வயதான எரிக் ஹோல்டர் என்பவரும் 48 வயதான எலிஸபெத் லோரன்ஸ் என்பவருமே நீண்டகால சட்ட இழுபறியின் பின்னர் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.
எரிக் ஹோல்டரின் தந்தையின் முன்னாள் மனைவியே எலிஸபெத் ஆவார். எரிக்கிற்கு வளர்ப்புத் தாயாக விளங்கியவர் எலிஸபெத்.
பிரெஞ்சு சட்டத்தின்படி வளர்ப்புப் பிள்ளைகளும் வளர்ப்புப் பெற்றோர்களுக்கும் திருமணம் செய்வது சட்டவிரோதமாகும்.
எரிக் ஹேர்டரின் தந்தையும் எலிஸபெத்தும் 2003 ஆம் ஆண்டு திருமணம் செய்து 3 வருடங்களின் பின் பிரிந்தனர்.
அதன்பின் எலிஸபெத்தும் எரிக்கும் காதல் கொண்டனர். இவர்களுக்கிடையில் இரத்த உறவு எதுவும் இல்லாதபோதிலும் இவர்களின் திருமணம் செய்துகொள்ளமுடியாது எனக் கூறப்பட்டது.
அதனால் தமது திருமணத்துக்கு அனுமதிக்குமாறு பிரான்ஸ் நீதிமன்றத்தில் இவர்கள் மனு தாக்கல் செய்ததுடன் பிரான்ஸ் ஜனாதிபதி பிராங்சுவா ஹொலண்டேவுக்கும் கடிதம் அனுப்பினர். அண் மையில் இவர்களின் திருமணத்துக்கு நீதிமன்றம் அனுமதியளித்தது.
அதையடுத்து இவர்கள் திருமணம் செய்துகொண்டனர். இத்திருமண வைபவத்தில் எரிக் ஹோல்டரின் தந்தையும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.