பாரிஸ் நகரின் புறநகர் பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் சிங்கக்குட்டியை வளர்த்த 30 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் பிறந்து ஆறு வாரங்களே ஆன அந்த சிங்கக்குட்டியை பத்தாயிரம் பவுண்டிற்கு விற்க முயன்றபோது போலிஸாருக்கு தகவல் கிடைத்தது என ஃபிரான்ஸ் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அவர் தனது பக்கத்து வீட்டில் அலமாரியில் ஒளிந்து கொண்டிருந்தபோது கண்டுபிடிக்கப்பட்டார்.
சிங்கக்குட்டி மெத்தையின் மேல் இருந்தது அச்சமயத்தில் தெரியவந்தது. சந்தேக நபரின் மேல் ஏற்கனவே பல திருட்டு வழக்குகளும் உள்ளன.
புலி, சிங்கம் போன்ற விலங்குகள் சட்டவிரோதமாக கண்டறியப்படுவது இது முதன்முறையல்ல.
2017ஆம் ஆண்டு, பாரிஸ் நகரில் யாருமற்ற அடுக்குமாடி குடியிரிருப்பு ஒன்றில் செல்ஃபி எடுப்பதற்காக வளர்க்கப்பட்ட சிங்கக்குட்டியை போலிஸார் மீட்டனர்.
அதன்பின் அந்த சிங்கக்குட்டி தென் ஆப்பிரிக்காவில் உள்ள விலங்குகள் சரணாலயத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
நெதர்லாந்தில் இந்த மாத தொடக்கத்தில் உடற்பயிற்சி செய்ய வந்தவரின் கண்ணில், சிங்கக்குட்டி ஒன்று கூண்டில் தனித்துவிடப்பட்டிருந்தது தென்பட்டது.